Monday, July 30, 2012

கலங்காதே கண்மணியே





விழியால் கதை பேசி
வித்தைகளால் கை கோர்த்து
சிரிப்பால் உனை சீண்டி
நாம் சென்ற வீதி எல்லாம்
வாடி நிற்கிறதடி கண்ணம்மா
நான் மட்டும் செல்கையிலே

உன்னருகே நிழலாய்
தொடர்ந்து வர விதி இல்லை
நான் வடிக்கும் கண்ணீரெல்லாம்
நீ நடக்கும் வீதியிலே
மழையாய் பெய்கிறதே
நிரந்தரமாய் அழித்துவிட்ட
தடங்களை தேடியே...............


கலங்காதே கண்மணியே
கண்ணுக்குள் கண்மணியாய்
காலமெல்லாம் நான் இருக்க
காலனவன் சொல்வானோ
காதலது பிரிந்ததேன்று


உனக்கு நானும்
எனக்கு நீயும்
மறுபிறப்பில் காதலராய்
பிறக்க எண்ணி இறைவனவன்
செய்த பிரிவின் விதி என்றே
வாழ்ந்திறப்போம் பொன்மானே