எத்திசை நோக்கினும் உன்னுருவம் வந்தெந்தன் சிந்தைதனில் நிக்குதடா பாதை வழி நோக்கியபடி
காஞ்சி பட்டுடுத்து தலை மேவி பூச்சுடி நெற்றியிலே பொட்டிட்டு நீயிட்ட நகை பூட்டி கானமயில் காத்திருக்கு மாமனவன் வரவை எண்ணி உயிர் துடிப்பின் ஓசை கேட்டு தொடுத்த வைத்த சரம் சூட்ட வஞ்சி இவள் பார்வைக்கு வருவது நீ எக்காலம் ......................????
விழியால் கதை பேசி
வித்தைகளால் கை கோர்த்து
சிரிப்பால் உனை சீண்டி
நாம் சென்ற வீதி எல்லாம்
வாடி நிற்கிறதடி கண்ணம்மா
நான் மட்டும் செல்கையிலே
உன்னருகே நிழலாய்
தொடர்ந்து வர விதி இல்லை
நான் வடிக்கும் கண்ணீரெல்லாம்
நீ நடக்கும் வீதியிலே
மழையாய் பெய்கிறதே
நிரந்தரமாய் அழித்துவிட்ட
தடங்களை தேடியே...............
கலங்காதே கண்மணியே
கண்ணுக்குள் கண்மணியாய்
காலமெல்லாம் நான் இருக்க
காலனவன் சொல்வானோ
காதலது பிரிந்ததேன்று
உனக்கு நானும்
எனக்கு நீயும்
மறுபிறப்பில் காதலராய்
பிறக்க எண்ணி இறைவனவன்
செய்த பிரிவின் விதி என்றே
வாழ்ந்திறப்போம் பொன்மானே
விழி மூடா இரவுகளில் நிலவோடு நீண்ட பயணமாய் என் துணைவரும் உன் எண்ண சிதறல்கள் விடியலை நோக்கிய நிஜமான கற்பனைகளில் நிழலாய் பதிந்திருக்கும் உன் நினைவு சுவடுகள்
விடியும் வரை நடக்கும் நினைவு போராட்டத்தில் கொஞ்சம் நானாய் நிறைய நீயாய் -எனை ஆக்கிரமிகிறாய்
இதனை ரசிக்கவே விழிக்காதிருக்கிறேன் கனவிலாவது நீ அருகிருப்பதால் இப்போதாவது கலையட்டும் உன் மௌனம்
நாம் பொதுவாக பிஞ்சு குழந்தைகளையும் பெண்களையும் பூக்களாக, கடவுளாக பார்க்கிறோம் ஒப்பிட்டு பேசுகிறோம்.ஏன் ?அவர்கள் மென்மையானவர்கள்,ரசிக்கபடுபவர்கள் ,வாசனைமிக்கவர்கள் ,வண்ணம்மிகுந்தவர்கள் என்பதனாலேயே .
அத்துணை மென்மையான பூக்கள் கசக்கி நாசமாகி எறியப்படுகின்றனர் உலகின் ஒவ்வொருமூலையிலும் :( அவர்களுக்குதெரியாமலே வேலியே பயிரை மேய்கின்றது ,உண்மைதானே ??
சிறுவர் துஷ்பிரயோகம் ,பாலியல் பலாத்காரம் ,வன்முறை என இவர்கள் கருகி நாசமாகின்றனர் .இதனால் HIV/AIDSஎன்னும் விஷகிரிமி இவர்களுக்குள்புகுத்தப்படுகின்றது ..,,,,,,,,,,,
இதுவெல்லாம் உங்களுக்கு புதியவை அல்ல என்பது தெரிந்ததே இருப்பினும் ,இத்தனை தகவல்கள் தெரிந்த நாம் இவ்வாறானவர்களைஎவ்வாறு அங்கீகரிக்கின்றோம் ??? சமுகத்தில் அவர்களின் எதிர்காலம் என்ன ???
நான் பகிர்ந்திருக்கும்இந்த வீடியோவை பாருங்கள்
சுனிதா கிருஷ்ணன் ,
இந்தியாவில்சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல் துன்புறுத்தல் , பாலியல் பலாத்காரம் மற்றும் அதில் பாதிக்கபட்டவர்களுக்க தம் வாழ் நாளை அர்ப்பணித்து சேவை ஆற்றி வருபவர் . அவர்கள் பாதிக்கபட்டவர்களாக அன்றி சமுகத்தில் அவர்களுக்கு ஒரு அங்கிகாரத்தை கொடுக்க போராடும் ஒரு பெண்
இந்த வீடியோதான் என்னை எந்த பதிவை எழுத தூண்டியது.
எத்தனை போராட்டங்கள் ,எத்தனை சவால்கள் ?இது உலகமா இல்லை நரகமா என்ற கேள்வி என்னுள் :(
குடும்ப சூழ்நிலை, சந்தர்ப்பசூழ்நிலை இந்த பிஞ்சு குழந்தைகளையும் ,பெண்களையும் சாகடித்து விட்டதே :"(
கருகி போன மொட்டுக்கள் குப்பையில் தூக்கி எரிந்து விட்டு சமுகம் ,தனி மனித சமத்துவம் ,மனிதாபிமானம், உரிமைகள்பற்றி சமுகத்தில் நாம் பேசுகிறோம்
வெட்கம் :(,
சமுகம் என்பது யார் ,நான் நீங்கள் எம் குடும்பம் என் சேர்ந்து வரும் தனி மனித சேர்வைதானே .அப்படி இருக்கும் போது இவ்வாறான துஷ்பிரயோகங்கள் எம் மத்தியில் நடக்கும் போது நமக்கு தெரிந்தவர்களாய் இருந்தால் வாய் முடி சமுகத்தின் பேரில் தப்பித்து கொள்கிறோம் அல்லது மூடி மறைத்து விடுகிறோம் . இவ்வாறான தாக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க தவறுகிறோம்.
இவர்கள் உங்களிடம் உதவியை எதிர்பார்கவில்லை தங்களும் சமுகத்தில் தாமும்ஒருவராக அங்கிகரிக்கப்படுவதையும்,அவ்வாறுதாக்கப்பட தமக்காக குரல் குடுக்கவும் இன்னொருவர் அவ்வாறு நாசமாக்கப்படுவதை தடுப்பதையுமே எதிர்பார்கிறார்கள்.
நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் இந்த வீடியோவை மீண்டும் ஒரு முறை பாருங்கள் கருகிய இவ் மொட்டுக்கள் மீண்டும் துளிக்ர்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். இவ்வாறானவர்கள் உங்களிடத்தில் இருந்தால் அவர்கள் வாழ் வழி செய்து கொடுங்கள்.சிறு துளி பேரு வெள்ளம் இவ்வாறுஒவ்வொரு தனி மனிதனும் நினைப்பான்என்றால் அது சமுக நினைப்பாய் மாறிவிடும் அல்லவா.
இந்த வீடியோவைபகிர்வதன் மூலம் யாரோ ஒருவர் திருந்துவார்என்றால் அதுவே அவர்களுக்கு கிடைத்த அங்கிகாரம்
"வெள்ளை முகிலே" - Music Video
-
புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி "வெள்ளை முகிலே"
*"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா.."*
*நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா*
*பாடியவர...