அதர்மம் அழிக்க
யுகம் யுகமாய்
அவதரிப்பதாய் கண்ணன்
கீதை சொன்னான்
கண்டதில்லை
கண்ணனவனை
கண்கள் ஒருபோதும் -ஆயினும்
நரகாசுரனை வதம் செய்து
தீப ஒழி ஏற்றினான் அவன் .............
தெய்வம் மனுஷ ரூபேனாம்
என்கிறது சைவம் -அதை
கண்டது உன்னுருவில்
நம் இனம்
கண்ணனுக்கு பின்
அதர்மம் அழிக்க
புறப்பட்டவன் நீயல்லவா
நம் வீராவாய்.......
எடுத்த அவதாரமது
பாதியிலே ராவணச்சதியால்
சிதைந்தாலும் கலங்கவில்லை
காயப்பட்ட மனது
மீண்டும் நீ வருவாய்
கல்கி அவதாரமெடுத்து
சக்கராயுதம் நீ கொண்டு
கல்கி வதம் நாம் காண
என்று தணியும் எங்கள்
சுதந்திர தாகம் ???????????????
0 comments:
Post a Comment