Wednesday, March 16, 2011

தேற்றிக்கொள் நெஞ்சே



தேற்றிக்கொள் நெஞ்சே
விதியின் பாதையில்
உன்னோடு பயணிப்பவன்
அவன் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
வாழ்க்கை பயணத்தில்
உன் சக பயணி
அவன் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
உன் சந்தோஷம் , துக்கம்
கஷ்டம் பாரம் அனைத்தினதும்
பங்காளன் அவனில்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
நீ வரைந்த ஓவியத்தின்
அசல் அவன் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
உன் பெயரருகில் எழுதப்பட்டது
அவன் பெயர் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
காதல் சேர்த்த நம் உயிர்
வாழ்கையில் சேர
வரம் இல்லை என்றே
தேற்றிக்கொள் என் நெஞ்சே
தேற்றிக்கொள்

Monday, March 14, 2011

அநாதை காதலி





அன்று ஓயாமல் பேசியவள்
இன்று மையாய் கவி பேசுகிறாள்
காதோரம் பேசிச்சென்ற வாரத்தைகளை
கவியாய் கோர்கிறாள் .....

நிழல்களோடு பேசிப்பேசியே
தீர்ந்துவிடுகின்றன கற்பனைகள்
விடிந்தது அணைந்துவிடும்
விளக்குகள் போல் .....

தொலைத்துவிட துடிக்கிறேன்
நிஜத்தோடு ஒன்றிவிட்ட
உன் நினைவுகளையும்
நீ விட்டுசென்ற
அநாதை காதலியாய்.......