Monday, August 2, 2010

விதியா? சதியா?





உயிராய் வந்தென்
உள்ளம் கலைத்தாய்
உறவாய் வந்தென்
நெஞ்சம் புகுந்தாய்

காற்றாய் நீயும்
என்வாசல் வர
மலராய் நானும்
உன் திசை தொடர ............

புயலாய் வந்தென்
கனவு கலைத்து
சூரியனாய் எனை
சுட்டெரித்ததென்ன நியாயம் ????
மெழுகான நானும் உருகேன்
என்று தானோ ????

மொழி ஒன்று சேர்த்த
எம்மை ...... நீயே
விதிவந்து பிரித்தது
என சொல்லுதல் முறையோ ????

0 comments:

Post a Comment