Wednesday, December 8, 2010

தவிர்க்கிறாய் எனை நீ







இரு மன பரிமாற்றம்தனில்
ஒரு மனம் பறிபோனதற்கு
தினம் தினம் வந்து போகும்
 நினைவின் சாட்சியாய் 
கண்ணீர் துளிகள்  

உன்னை எனக்கு தந்த
அந்த நிமிடங்கள்,
உலகையே நான் வென்று விட்டதை 
உணர்த்திய உன் அருகாமை, 
யாருமே திட்டாத அளவு உன்னை
திட்டித் தீர்த்த   நேரங்கள், 
உயிர்   பிழிந்த உன் பிரிவு,
அத்தனையும் மூச்சிருக்கும் 
வரை மறக்காதட. 

மறைத்த   உண்மைகளில்
மறித்த என்   நிஜங்கள்
உணரவில்லை இன்னும் நீ
புரியவில்லை  என் பந்தம்
மனம் விட்டு பேசிய காலங்கள் அன்று
மனதையே விட்டு விட்டு பேசும் தருணங்கள் இன்று
ரணமாய் கொள்ளும் வேதனையில் இன்று
துடிக்கிறேன்   உள்ளம் நொந்து 
தவிர்க்கிறாய் எனை நீ
தவிக்கிறேன் நான் ஏன் என்று ????? 
  

12 comments:

Feelings ஓவரா இருக்கே....

வணக்கம்,

உங்கள் கவிதை மிகவும் அற்புதம்.



உன்னால், உனக்காக உன்னோடு மட்டும் நான் கவியாவதில் ஆனந்தமென்ற

என் கவிதை வரிகளை உங்கள் வலைப்பூவில் போட்டு மரியாதை செய்ததற்கு நன்றி...



அன்புடன்,

கவிபாரதி..

ரொம்ப feel பண்ணி எழுதிருக்கீங்க... ஹ்ம்ம் நல்லா இருக்கு

ஓ அப்படியா
நன்றி பிரபாகர் :)

நன்றி බිඟූ...:)

நன்றி கவி பாரதி
ஆம் உங்கள் வரிகள் தான்
தலைப்பில் என்பதால் பெயர் போட முடியவில்லை மன்னிக்கவும்.

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ;)

நன்றி அருண் :)
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் .

எங்க என் பின்னூட்டத்த காணும்...

வாங்க ஹரிஸ்
நீங்க போடவே இல்லையே

சரி விடுங்க..ஏன் ஏன் இவ்வளவு பீலிங்ஸ்...

Post a Comment