Friday, November 18, 2011

Why This கொலவெறி ????






மாமா மாமான்னு
ஏங்க வச்ச
ஏன்டா என்ன தவிக்கவிட்ட
அம்மு அம்முன்னு
பேசி பேசியே
எந்தன் நெஞ்ச நீ கவுத்த


வச்ச பாசமெல்லாம்
வேசமாச்சே மாமா
உன் பைங்கிளி
இங்க ஏங்குதே மாமா


ஒத்தையில தவிக்கும்
என் மனுசு புரியலையா
எங்கோ நீ நினைக்க
பாவி மக உறுகுரனே

ஒருமுறை வருவியா
இல்ல கானலாய்தான்
போவியா????
நிஜத்துலதான் நீ போய்ட்ட
கனவுல ஏனோ படுத்துற
ஏன் இந்த
கொலவெறி மாமு

Wednesday, September 21, 2011

கனவே கலையாதே ...!!!!!!!!!!!




விழி மூடா இரவுகளில்
 நிலவோடு நீண்ட பயணமாய்
என் துணைவரும் உன்
எண்ண சிதறல்கள்

விடியலை நோக்கிய
நிஜமான கற்பனைகளில்
நிழலாய் பதிந்திருக்கும்
உன் நினைவு சுவடுகள்


விடியும் வரை
நடக்கும் நினைவு போராட்டத்தில்
கொஞ்சம் நானாய்
நிறைய நீயாய் -எனை
ஆக்கிரமிகிறாய்

இதனை ரசிக்கவே
விழிக்காதிருக்கிறேன்   
கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம்


Sunday, August 14, 2011

கருகிய மொட்டுக்கள் துளிர்க்கட்டும்



நாம் பொதுவாக பிஞ்சு குழந்தைகளையும் பெண்களையும் பூக்களாககடவுளாக பார்க்கிறோம் ஒப்பிட்டு பேசுகிறோம்.ஏன்  ?அவர்கள் மென்மையானவர்கள்,ரசிக்கபடுபவர்கள் ,வாசனைமிக்கவர்கள் ,வண்ணம்மிகுந்தவர்கள் என்பதனாலேயே .
அத்துணை மென்மையான பூக்கள் கசக்கி நாசமாகி எறியப்படுகின்றனர் உலகின் ஒவ்வொரு  மூலையிலும் :( அவர்களுக்கு  தெரியாமலே வேலியே பயிரை மேய்கின்றது ,உண்மைதானே ??
சிறுவர் துஷ்பிரயோகம் ,பாலியல் பலாத்காரம் ,வன்முறை என இவர்கள் கருகி நாசமாகின்றனர் .இதனால் HIV/AIDS  என்னும் விஷகிரிமி இவர்களுக்குள்     புகுத்தப்படுகின்றது ..,,,,,,,,,,,
இதுவெல்லாம் உங்களுக்கு புதியவை அல்ல என்பது தெரிந்ததே இருப்பினும் ,இத்தனை தகவல்கள் தெரிந்த நாம் இவ்வாறானவர்களை எவ்வாறு அங்கீகரிக்கின்றோம் ??? சமுகத்தில் அவர்களின் எதிர்காலம் என்ன ???
நான் பகிர்ந்திருக்கும்  இந்த வீடியோவை பாருங்கள் 







சுனிதா கிருஷ்ணன் ,

இந்தியாவில் சிறுவர் துஷ்பிரயோகம்  பாலியல் துன்புறுத்தல் , பாலியல் பலாத்காரம் மற்றும் அதில் பாதிக்கபட்டவர்களுக்க தம் வாழ் நாளை அர்ப்பணித்து சேவை ஆற்றி வருபவர் .
அவர்கள் பாதிக்கபட்டவர்களாக அன்றி சமுகத்தில் அவர்களுக்கு ஒரு அங்கிகாரத்தை கொடுக்க போராடும் ஒரு பெண் 
இந்த வீடியோதான் என்னை எந்த பதிவை எழுத தூண்டியது.
எத்தனை போராட்டங்கள் ,எத்தனை சவால்கள் ?இது உலகமா இல்லை நரகமா என்ற கேள்வி என்னுள் :(
குடும்ப சூழ்நிலை, சந்தர்ப்ப சூழ்நிலை இந்த பிஞ்சு குழந்தைகளையும் ,பெண்களையும் சாகடித்து விட்டதே :"(
கருகி போன மொட்டுக்கள் குப்பையில் தூக்கி   எரிந்து விட்டு சமுகம் ,தனி மனித சமத்துவம் ,மனிதாபிமானம், உரிமைகள்  பற்றி சமுகத்தில் நாம் பேசுகிறோம் 
வெட்கம் :(,
சமுகம் என்பது யார் ,நான் நீங்கள் எம் குடும்பம் என் சேர்ந்து வரும் தனி மனித சேர்வை  தானே .அப்படி இருக்கும் போது இவ்வாறான துஷ்பிரயோகங்கள் எம் மத்தியில் நடக்கும் போது நமக்கு தெரிந்தவர்களாய்  இருந்தால் வாய் முடி சமுகத்தின் பேரில் தப்பித்து கொள்கிறோம்  அல்லது மூடி மறைத்து விடுகிறோம் . இவ்வாறான தாக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க தவறுகிறோம். 
இவர்கள் உங்களிடம் உதவியை எதிர்பார்கவில்லை தங்களும் சமுகத்தில் தாமும் ஒருவராக அங்கிகரிக்கப்படுவதையும், அவ்வாறு   தாக்கப்பட தமக்காக குரல் குடுக்கவும் இன்னொருவர் அவ்வாறு நாசமாக்கப்படுவதை தடுப்பதையுமே   எதிர்பார்கிறார்கள்.
நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் இந்த வீடியோவை மீண்டும் ஒரு முறை பாருங்கள் கருகிய இவ் மொட்டுக்கள் மீண்டும் துளிக்ர்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். இவ்வாறானவர்கள் உங்களிடத்தில் இருந்தால் அவர்கள் வாழ் வழி செய்து கொடுங்கள்.சிறு துளி பேரு வெள்ளம் இவ்வாறு ஒவ்வொரு தனி மனிதனும் நினைப்பான்  என்றால் அது சமுக நினைப்பாய் மாறிவிடும் அல்லவா.
இந்த வீடியோவை  பகிர்வதன் மூலம் யாரோ ஒருவர் திருந்துவார்   என்றால் அதுவே அவர்களுக்கு கிடைத்த அங்கிகாரம்   

               நன்றி 



Thursday, August 4, 2011

மாற்றம்




நீ நீயாக
நான் நானாக
புரியாமல் நகரும் காலங்கள்
விடை சொல்லாமல் நீயும்
விடை தெரியாமல் நானும்

என்னுள் நான்
ஆறுதல் தேடுகையில்
நினைவெல்லாம் நீயாய்
என் கவிகளுக்கெல்லாம்
பொருளாகிறாய்........

கவி தலைப்பும்
என் வாழ்வின் விளக்கமும்
நீயென தெரிந்தும்
வாசித்து விட்டு வெறும்
தலைப்பாய் மட்டும்
போய்விடுகிறாயே...........
என் வாழ்வின் அர்த்தம்
சொல்லாமல் ......

தினம் சிரித்து
ஆனந்த பறவையாய்
ஓடித்திரிந்த பழைய
நிம்மதி , ஆறுதல்
காதல் , நட்பு
மொத்தத்தில் பழைய
துஷி வேண்டும்
தருவாயா ?



Wednesday, August 3, 2011

துடுப்பற்ற ஓடம்...



                                                    
                          
என் அனைத்துச் சுமைகளையும்
சுமந்து எனக்காக தேயும் தாய் சிலந்தி நீ...
உன் சிந்தனைகளில் நான் ஓர்
உயிருள்ள சிற்பம்..
உனை மறக்க நீ எனை நினைப்பவள்...
என் பாசத்தை யாசிக்கும் உன்னை
ஏமாற்றி நான் போடும் வேஷங்கள்
என்னை தலைகுணிய வைக்கிறது
நீ உண்மையில் வைரம்தான்..
அதனால்தான்.. நீ கொண்ட அன்பு
கொஞ்சமும் மாறாமல் உள்ளது..
ஆனால் நானோ உலர்மர பட்டையானேன்..
பச்சையம் இருக்கும் வரை
உன்னோடு ஒட்டியிருந்தேன்..
நான் உதிர்வது என்னையும் உட
உனக்குத்தான் கவலை என்பதை
என்னையும் விட என் ஆன்மாவுக்கு தெரியும்..
நேற்றுக் கண்ட இன்பத்திற்காய்
எனை இன்றுவரை இனிமையூட்டும்
உனை மறந்து போனேன்..
என் கால்கள் கானலை கண்டு
தடம்புறழ்கின்றன..
அன்பே! அலைமோதும்
என் சிந்தனைகளை
சாந்தப்படுத்த எனக்கு முடியவில்லை..
உன் அன்பையும் மீறி
அந்த புயல் என்னை தாக்குவதை
என்னால் தடுக்க முடியவில்லை..
நான் அன்புக்கும் காதலுக்கும் மத்தியில்
தத்தளிக்கும் துடுப்பற்ற ஓடம்..
என் முடிவை நான் அறியேன்..
                                               

Tuesday, June 28, 2011

என் அப்பாவுக்கு,




தத்தி தத்தி நடந்தவள்
சின்ன  இதழ் முத்தமிட்டவள்
வைத்து வைத்து அழகு பார்த்தவள்
சொந்த காலில் நின்று விட்டாள்
என்று பெருமைப்படுகிறாய்


என் தன்னபிக்கையின் பிறப்பிடம்
உற்சாகத்தின் ஊற்றிடம்
சாதனையின் சாய்விடம்
ஆறுதலின் அமைவிடம்
எல்லாம் நீங்கள் தானே


 இன்னும் சிறு பிள்ளையாய்
உன்மடி ஏறி நான் உட்கார
மகிழ்ந்து போகிறாய்
செல்லமாய் கொஞ்சுகிறாய் .........

என் வருங்காலம்
நீ வளர்த்த கனவுகள்
என்னவன் எப்படி வருவானோ?
என் உயிரை நன்றாய் பார்த்து கொள்வானோ ?-உன்
இரவு புலம்பல்கள் என் தாயிடம் .......


குடும்பத்தின் ஆல மரமாய்
அன்போடும் அரவணைப்போடும்
எமை காத்து வருகிறாய்
உனை தந்தையாய் நாம் அடைய
எத்தனை தவம் செய்து விட்டோம்


வாழ்த்துகிறேன் உன் மகள்
வாழ்க நீ பல்லாண்டு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா



Monday, May 2, 2011

புரியாமல் புரிந்த புரியாத புதிர்




நினைவது நீயாக
புலம்புவது நானாக

ணர்வது நீயாக
வெளிப்படுவது நானாக

ண்களது நீயாக
பார்வையது நானாக

சுவையனைத்தும் நீயாக
ருசிப்பது நானாக

லகனைத்தும் நீயாக
வாழ்கிறவள் நானாக

புரியவில்லை கணக்கு
னக்கு எல்லாம் அவளாக

டவுள் வகுத்த கணக்கினில்
ன்னி இவள் தொலைவாக.

Wednesday, April 6, 2011

கிறுக்கல்.......

   



  தமிழ்

ழகான சொல்லெடுத்து
அர்த்தமான பொருள்தனை
இன்பமாய் உணரும் படி
ஆழமாய் கோர்க்கிறேன்
என் கவிகளை
அத்தனையும் ஒன்று சேர்ந்து
ஒற்றை வார்த்தையில்
பிரசவிக்கின்றது
அம்சமான
உன் பெயரை





ஏக்கம்
ட்டாக் கனி நீ
அத்திக்காய் என தெரிந்தும்
எட்டி எட்டிப் பார்கிறேன்
தவறியாவது
என் கையில் விழமாட்டாயா என





காதல்
ரு மனதில்
அரும்பாய் துளிர்த்து
எனக்குள் தளிர்த்து
பாதியிலே
உனக்குள் உதிர்ந்து போன
இலை துளிர் கால உதிர்வு




Wednesday, March 16, 2011

தேற்றிக்கொள் நெஞ்சே



தேற்றிக்கொள் நெஞ்சே
விதியின் பாதையில்
உன்னோடு பயணிப்பவன்
அவன் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
வாழ்க்கை பயணத்தில்
உன் சக பயணி
அவன் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
உன் சந்தோஷம் , துக்கம்
கஷ்டம் பாரம் அனைத்தினதும்
பங்காளன் அவனில்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
நீ வரைந்த ஓவியத்தின்
அசல் அவன் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
உன் பெயரருகில் எழுதப்பட்டது
அவன் பெயர் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
காதல் சேர்த்த நம் உயிர்
வாழ்கையில் சேர
வரம் இல்லை என்றே
தேற்றிக்கொள் என் நெஞ்சே
தேற்றிக்கொள்

Monday, March 14, 2011

அநாதை காதலி





அன்று ஓயாமல் பேசியவள்
இன்று மையாய் கவி பேசுகிறாள்
காதோரம் பேசிச்சென்ற வாரத்தைகளை
கவியாய் கோர்கிறாள் .....

நிழல்களோடு பேசிப்பேசியே
தீர்ந்துவிடுகின்றன கற்பனைகள்
விடிந்தது அணைந்துவிடும்
விளக்குகள் போல் .....

தொலைத்துவிட துடிக்கிறேன்
நிஜத்தோடு ஒன்றிவிட்ட
உன் நினைவுகளையும்
நீ விட்டுசென்ற
அநாதை காதலியாய்.......

Sunday, January 30, 2011

நம் தமிழனுக்காய்..............



ஏழையின் சிரிப்பில் இன்பத்தை காண்பது என்பது போய் இப்போ ஏழையின்  அழுகையில் இன்பம் காண் என்பதே நடந்து கொண்டிருக்கிறது.
ஈழத்தில் தமிழினம்  சாவுண்டது  பத்தாதென்று இப்போ அப்பாவி ஏழை மீனவர்களும் இவ்வாறு துடித்து தம்  உயிர் கொடுப்பது பரிதாபமே. 
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலை மாறி தமிழன்   என்று சொல்லடா சுட்டு கொல்லடா" என்ற பரிதாப நிலைக்கு தமிழன் உயிருக்கு மதிப்பு போய்விட்டது. அண்மையில் நடந்த மீனவ படு கொலைகளை கண்டித்து உலகில் தமிழர்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்க என் சார்பாக நன் என்ன செய்ய முட்யும் என் பார்த்ததில், வலைப்பூக்களில் பலர் தங்கள் வழிகளை, ஆதங்கங்களை தெரிவித்து இருந்தார்கள். அதில் வைகை சகோ அருமையான ஒரு கடிதத்தை பதிவாக போட்டிருந்தார். அதே போல நாம philosophyprabhakaran  உணர்ச்சி துண்டும் விதத்தில் ஒரு பதிவையும் தோழி ரேவா அருமையான ஒரு கவிதையையும் தந்து பதிவுகளாக தந்திருந்தார்கள். அதில் சகோ வைகையின்வைகை பதிவை இங்கு பதிவாக போடலாம் என்று அதை உங்கள் பார்வைக்கு தந்திருக்குறேன் என் கடமையின் சிறு பகுதியாக........................... 



அன்புள்ள முதல்வருக்கு(?!),
    ஒரு அப்பாவி மீனவனின் கடிதம், நீங்கள் நலமா என்று கேட்க்கப்போவதில்லை,

 உங்கள் நலம் மற்றும் உங்கள் குடும்ப நலம் ஊரே அறியும்! நாங்கள் நலம் என்றும் சொல்லப்போவதில்லை, எங்கள் நாதியற்ற வாழ்க்கையை நாடே அறியும், உங்களுக்கும் உங்கள் அன்னையையும் தவிர்த்து! நீங்கள் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசில் என்ன மரியாதை கொடுப்பார்களோ அந்த மரியாதையை இந்த கடிதத்திற்கு கொடுக்க வேண்டாம்! அது உங்கள் பதவியை காப்பாற்ற எழுதுவது! இது எங்கள் உயிரை காப்பாற்ற எழுதுகிறோம்! தேர்தல் நேரம் வேறு, உங்களுக்கு கூட்டணி பற்றி பேசவும், தொகுதி பங்கீடு பற்றி பேசவுமே நேரம் சரியாக இருக்கும், எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலைப்பட நேரமிருக்காது! இருந்தாலும்.....எங்களில் ஒருவன் இறந்தால்  உங்கள் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும், அதற்க்காகவாது கவலைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்!


  ஐநூறு மீனவர்களை சுட்டதர்க்குகூட டெல்லி செல்லாத நீங்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு டெல்லி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன்! நல்லது....அப்படியே உங்கள் அன்னையிடம் எங்களைப்பற்றியும் சொல்லுங்கள்! பிரான்சில் சிங்கின் தலைப்பாகைக்கு வரிந்து கட்டி பேசிய மன்மோகனிடம் சொல்லுங்கள், இங்கு தமிழ் மீனவனின் தலையே போய்க்கொண்டிருக்கிறது என்று! இலங்கைத்தமிழன் சாகும்போதுதான் இந்திய இறையாண்மை தடுத்தது! இப்பொழுது இந்திய மீனவனே செத்துக்கொண்டிருக்கும் பொழுது எந்த இறையாண்மை தடுக்கிறது என்று கேட்டுச்சொல்லவும்,

   ஆஸ்திரேலியாவில் ஒரு வட இந்தியன் தாக்கப்பட்டால் கொதித்து எழும் இந்திய பத்திரிக்கைகள் இத்தனை மீனவன் இறந்த பின்னும் மௌனம் காப்பது நாங்கள் இந்தியர் இல்லை என்பதாக அர்த்தமா?! அதுசரி....நாங்கள் தேர்ந்தெடுத்த உங்களுக்கே எங்களைப்பற்றி அக்கறை இல்லை..அவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?! ரெம்ப நாளா உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்...எங்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்தேர்களே...அவர் யார் என்ன பெயர் என்று சொல்லமுடியுமா? இத்தனை நடந்த பிறகும் ஒரு கண்டன அறிக்கை கூட விடாமல் உங்கள் பின்னால் பதுங்கிக்கொள்ளும் அவரை பார்க்கவேண்டும்!

எங்கள் உயிரின் மதிப்பு உங்களுக்கு ஐந்து லட்ச்சத்தோடு முடிந்துவிடுகிறது! என்ன செய்வது உயிரோடு இருந்தால் உங்கள் ஓட்டு கணக்கு அதைவிட கம்மிதான்! இதை மனதில் வைத்தாவது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்! தமிழின தலைவர் என்று சொல்லியே ஒரு பக்கம் தமிழினத்தையே ஒழித்தாகிவிட்டது! அந்த வெறி பிடித்த வேட்டை நாய்களுக்கு இன்னும் ரத்த வெறி அடங்காமல் இப்பொழுது நாடு தாண்டி நாட்டாமை செய்கின்றது! இங்கு உள்ள தமிழர்களையும் அழித்து விட்டால் உங்கள் வாரிசுகளை எங்கு கொண்டு போய் முதலமைச்சர் ஆக்குவது?! உங்களுக்கு கவலைப்படவேண்டிய விசயந்தான்....யோசிங்க ஐயா! கனிமொழியின் மகன் தலைவராகும் காலத்திலும் கூட வோட்டு போட நாங்கள் வேண்டும்! இந்த படித்தவர்களை நம்ப்பாதீர்கள்! நீங்கள் செய்த ஊழலும், அடித்த கொள்ளையும் தெரிந்துவிட்டால் வோட்டை மாற்றிப்போடும் அபாயம் உண்டு! ஆனால் நாங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய் அரிசிக்கும் இலவச டிவிக்கும் எப்போதும் மாறாமல் இருப்போம்!

  முடிவாக ஒன்று ஐயா....இது முடியாத தொடர்கதை என்று எங்களுக்கும் தெரியும்! அதானால் அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள், யார் சாவது என்று தெரியாமலே கடலுக்கு செல்வதை விட...வாரம் ஒருவரை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிகிறோம்! அவர்கள் வெறி அடங்கும் வரை சுட்டுக்கொல்லட்டும்! மகாபாரத்தில் வருமே அதுபோல! எங்களுக்கும் ஒரு பீமன் வராமலா போவான்?!! அதுவரை உங்கள் கடிதங்கள் தொடரட்டும்! அதுவரை உங்கள் வசனத்தை நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்! "வாழ்வது நானாக இருக்க, சாவது தமிழனாக இருக்கட்டும்!"
      இப்படிக்கு,
     உங்கள் ஓட்டு வங்கியில் ஒரு அப்பாவி மீனவன்


ஏதோ ஒருவகையில் நம் ஆதரவாய் அவர்களுக்கு வழங்குவோம் 
நம் போடும் சத்தம் சென்றடைய www.savetnfisherman.org  தளத்தில்  நம் ஆதரவை தெரிவிப்போம்
இணைய தள முகவரி : http://savetnfisherman.org/
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman , http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப http://www.petitiononline.com/TNfisher/petition-sign.html?



உங்கள் வலைப்பூவின் ஓரத்தில்:




நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் கீழே இருக்கும் இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Design - Add a Gadget - Html Java/Script சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து உங்கள் பிளாக் சைடு பாரில் இந்த படத்தை தெரிய வைத்தால் இந்த செய்தி மேலும் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும். நம் தமிழனுக்காக உங்கள் பிளாக்கில் ஒரு சிறய இடத்தை ஒதுக்கிகொடுக்கவும்
  இப்படி இந்த பேனரை உங்கள் தளத்தின் சைடு பாரில் பதிந்தால் உங்கள் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு அறிய உதவும்.

இதுதொடர்பான கருத்தாக்கங்கள் எழுதத்தொடங்கிவிட்டதால், தொடருங்கள்.டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலை தளத்தில் இணைக்க விரும்பினால் [இப்பக்கத்தின் வலதுபுறம் போல] Dashboard -> design ->page template ->add a gadget -> HTML/Java script என்ற கட்ஜெட்டில் கீழுள்ள கோடுகளைப் போட்டு சேமிக்கலாம். அதுபோக மேற்கண்ட விஷயங்களையும சொல்லலாம்.

கோடிங்குக்கு: http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
                               http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html

                                     http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_29.html
                                     http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
                                      http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html


டிஸ்கி 1: உங்கள் பிளாக்கில் ஒரு பதிவை ஒரு கண்டனமாக தெரிவியுங்கள். டைப் செய்ய கடினமாக இருந்தால் மற்ற நண்பர்கள் போட்டுள்ள பதிவுகளை காப்பி செய்தாவது உங்கள் பிளாக்கில் பதிவிடுங்கள் ஒரு வழியாக தூங்கி கொண்டிருப்பதை போல நடித்து கொண்டிருக்கும் அரசியல் முதலைகளை எழுப்பினால் போதும்.

Wednesday, January 26, 2011

காதல் பூ






காலமெல்லாம் உன் முற்றத்து
வாசனை ரோஜாவாய்
பூக்க ஆசை கொண்ட எண்ணமதை
மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மணக்க சொல்லி
கொன்றதென்ன நியாயம்


உன் நினைவது
உரமாய், தண்ணீராய் ,காற்றாய்
உட்புகுந்து வேருன்றிய பந்தமத்தை
மண்ணோடு புதைத்து விட்டு - வெறும்
கொடியாய் வலம் வரச் சொல்லவதென்ன நியாயம்

வசந்தங்களைதானே யாசித்தேன்
நோயாய் நுழைந்து
மருந்தை தர மறுத்து
உதிர்வை தந்து
மரண அவஸ்தை தந்து போகிறாய் அன்பே
தொலைந்த வாசத்துக்கு
செயற்கை மணம் (முகவரி) கொடுத்து

Wednesday, January 19, 2011

தோழா வானம் தூரம் இல்லை







தோழனே 
எங்கோ பிறந்த  நாம் 
எப்படியோ சந்தித்து 
நண்பர்களாகி 
நட்பெனும் கொடியில் பூக்களானோம்

 என் வாழ்வில் 
இனிய உறவாய் 
அன்பு தோழனாய் 
ஒரு ஆலோசகனாய் 
நுழைந்தாய் .....

தினம் தினம் 
மறக்காத 
சுக விசாரிப்பு 
sms கள், 
சில சண்டைகள் 
சமாதானங்கள்.
fb comments  
வலைப்பூ  பகிரல்கள்  என் தொடர்ந்த 
நம் இணைப்பு  
இனியும் தொடரும் எனும் நம்பிக்கையில் 
உன் நண்பி 

நீ இவள் உறவில்  பங்கெடுத்த போது 
அன்பினால் கலங்கிய விழிகள் 
இன்று நீ கொஞ்சம் தூரம் போகிறாய் என்றதும் 
ஈரமாகிறது .

என்ற போதும் 
நீ சாதிக்க வேண்டியவை,
அடைய வேண்டியவை 
வெல்ல வேண்டியவை பல 
அதற்காய் உன் மேல படிப்பு 
என் நண்பன் வென்று வர 
இவள் என்றும்   துணை இருப்பாள் 

உன் பயணம் சிறக்க 
நீ வாழ்வில் மேலும் வளர 
உன் மேல் படிப்பு வெற்றி பெற
வாழ்த்துகள் டிலீப் 

"தோழா வானம் தூரம் இல்லை "

Sunday, January 16, 2011

நினைவுகள் ...


சில நினைவுகள் 
பல உறவுகளை 
நினைவுப்படுத்தும்...
எனக்கு உறவுகளே 
உன் நினைவுகள்தான் 
காதலியே....


Saturday, January 15, 2011

தை பிறந்தால் வழி பிறக்கும்





பொங்கும் பாலைப்போல 
இனித்திடும் கரும்பை போல 
மணக்கும் மஞ்சளைப் போல
தித்திக்கும்  பொங்கலைப் போல  
உங்கள் வாழ்வும் தித்திப்பாக அமைய வாழ்த்துக்கள 
வலைப்பூ   நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் 

Thursday, January 13, 2011

உதவும் கரங்களே





வெட்டுப்பட்ட புண்ணில் 
மீண்டும் வேல் பாய்ந்ததை போல் 
போரில் பட்ட காயம் ஆறுமுன்
இயற்கையின் சீற்றம்  தான் 
எம்மை தாக்கியதே 

 உரிமை இழந்து 
உறவிழந்து நாடோடி வாழ்க்கை
இப்போ இயற்கையின்   கோரத்தாண்டவம் 
எல்லாம் இழந்து 
அரிசி விளையும் நம்மிடம் 
அன்றாட உணவுக்கே வழியின்றி 
உறங்க இடமின்றி 
உள்நாட்டு அகதிகளாய்
அல்லலுறும் எம் உறவுகள் 

உதவும் கரங்களை 
நம்பி கழியும் நாட்கள் 
பச்சிளம் குழந்தைகள் 
பாலுக்கு தத்தளிக்கும் தருணங்கள் 
 


மனிதம் உள்ள உள்ளங்களுக்கு வேண்டுகோள் 
உங்கள் கரமும் இணையட்டும் இவ் உறவுகளுக்கு உதவ 
பொங்கலுக்கு செலவழிக்கும் பணத்தை
இம்முறை அவர்கள் பசி போக்க பயன்படுத்துங்கள் 

Saturday, January 8, 2011

நீ தனியாக இல்லை ...........





நான்குச்  சுவர்களுக்குள்
சிறைப்படும்  உன் உணர்வுகளின் 
ஏக்கம் 
விழிகளுக்குள்ளே     எட்டிப்பார்த்து 
வெளிவருமுன் வற்றிப்போகும் 
உன் அழுகை 

தாய்மடி  தூக்கம் 
தந்தையின் தோழமை 
உடன்  பிறந்தவர் பாசம் 
ஒரு தொலைபேசி அழைப்பில் 
கேட்க    
கொஞ்சிப்பேசிய காதல்  
நினைவிருந்தும் 
கனவில் மட்டும் தரிசனம்  

Thursday, January 6, 2011

மனதின் பதிவுகள்


மனதின் பதிவுகள்" என்ற ஒரு பகுதி 
இன்று முதல்  ஹரிணியின் 
நாட் குறிப்பின்  பக்கங்களில் இருந்து ...........................





பருவமெனும் கீர்த்தனையில் 
ஆதார   ஸ்ருதியாய்
இசை மீட்க வந்தவனே !! 
மனதோடு  வளர்த்து வந்த
அன்பை காதலாக 
அங்கிகரித்த 
இந்நாள் ........... 
என்னென்று சொல்வேன் 

வெளிப்படுத்திய கணப்பொழுதில் 
 உன் விம்பம்  காணத்துடித்ததடா
வஞ்சி  இவள் விழிகள்    

காதலிப்பதை விட 
காதலிக்கப்படுவதின்
இன்பமதை உணர்ந்து நெகிழ்ந்தேன் 

இனி இவள் உன் சொந்தம் 

                         ♥♥   ப்ரியமுடன் துஷி ♥♥

Wednesday, January 5, 2011

நீ...



ன்னை முதன்முதலாய் பார்த்த போது 
என் கண்ணுக்குள் - நீ
ன்னை முதன்முதலாய் காதலிக்கும் போது 
என் நெஞ்சுக்குள் - நீ
ன்னை விட்டு பிரியும் போது 
என் கண்ணீருக்குள் - நீ
ன்னை விட்டு உயிர் பிரியும் போது 
என் உயிரே – நீ




                                                                                        
                                                                                               ♥♥ ப்ரியமுடன்  டிலீப் ♥♥