விழி மூடா இரவுகளில் நிலவோடு நீண்ட பயணமாய் என் துணைவரும் உன் எண்ண சிதறல்கள் விடியலை நோக்கிய நிஜமான கற்பனைகளில் நிழலாய் பதிந்திருக்கும் உன் நினைவு சுவடுகள்
விடியும் வரை நடக்கும் நினைவு போராட்டத்தில் கொஞ்சம் நானாய் நிறைய நீயாய் -எனை ஆக்கிரமிகிறாய்
இதனை ரசிக்கவே விழிக்காதிருக்கிறேன் கனவிலாவது நீ அருகிருப்பதால் இப்போதாவது கலையட்டும் உன் மௌனம்
நாம் பொதுவாக பிஞ்சு குழந்தைகளையும் பெண்களையும் பூக்களாக, கடவுளாக பார்க்கிறோம் ஒப்பிட்டு பேசுகிறோம்.ஏன் ?அவர்கள் மென்மையானவர்கள்,ரசிக்கபடுபவர்கள் ,வாசனைமிக்கவர்கள் ,வண்ணம்மிகுந்தவர்கள் என்பதனாலேயே .
அத்துணை மென்மையான பூக்கள் கசக்கி நாசமாகி எறியப்படுகின்றனர் உலகின் ஒவ்வொருமூலையிலும் :( அவர்களுக்குதெரியாமலே வேலியே பயிரை மேய்கின்றது ,உண்மைதானே ??
சிறுவர் துஷ்பிரயோகம் ,பாலியல் பலாத்காரம் ,வன்முறை என இவர்கள் கருகி நாசமாகின்றனர் .இதனால் HIV/AIDSஎன்னும் விஷகிரிமி இவர்களுக்குள்புகுத்தப்படுகின்றது ..,,,,,,,,,,,
இதுவெல்லாம் உங்களுக்கு புதியவை அல்ல என்பது தெரிந்ததே இருப்பினும் ,இத்தனை தகவல்கள் தெரிந்த நாம் இவ்வாறானவர்களைஎவ்வாறு அங்கீகரிக்கின்றோம் ??? சமுகத்தில் அவர்களின் எதிர்காலம் என்ன ???
நான் பகிர்ந்திருக்கும்இந்த வீடியோவை பாருங்கள்
சுனிதா கிருஷ்ணன் ,
இந்தியாவில்சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல் துன்புறுத்தல் , பாலியல் பலாத்காரம் மற்றும் அதில் பாதிக்கபட்டவர்களுக்க தம் வாழ் நாளை அர்ப்பணித்து சேவை ஆற்றி வருபவர் . அவர்கள் பாதிக்கபட்டவர்களாக அன்றி சமுகத்தில் அவர்களுக்கு ஒரு அங்கிகாரத்தை கொடுக்க போராடும் ஒரு பெண்
இந்த வீடியோதான் என்னை எந்த பதிவை எழுத தூண்டியது.
எத்தனை போராட்டங்கள் ,எத்தனை சவால்கள் ?இது உலகமா இல்லை நரகமா என்ற கேள்வி என்னுள் :(
குடும்ப சூழ்நிலை, சந்தர்ப்பசூழ்நிலை இந்த பிஞ்சு குழந்தைகளையும் ,பெண்களையும் சாகடித்து விட்டதே :"(
கருகி போன மொட்டுக்கள் குப்பையில் தூக்கி எரிந்து விட்டு சமுகம் ,தனி மனித சமத்துவம் ,மனிதாபிமானம், உரிமைகள்பற்றி சமுகத்தில் நாம் பேசுகிறோம்
வெட்கம் :(,
சமுகம் என்பது யார் ,நான் நீங்கள் எம் குடும்பம் என் சேர்ந்து வரும் தனி மனித சேர்வைதானே .அப்படி இருக்கும் போது இவ்வாறான துஷ்பிரயோகங்கள் எம் மத்தியில் நடக்கும் போது நமக்கு தெரிந்தவர்களாய் இருந்தால் வாய் முடி சமுகத்தின் பேரில் தப்பித்து கொள்கிறோம் அல்லது மூடி மறைத்து விடுகிறோம் . இவ்வாறான தாக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க தவறுகிறோம்.
இவர்கள் உங்களிடம் உதவியை எதிர்பார்கவில்லை தங்களும் சமுகத்தில் தாமும்ஒருவராக அங்கிகரிக்கப்படுவதையும்,அவ்வாறுதாக்கப்பட தமக்காக குரல் குடுக்கவும் இன்னொருவர் அவ்வாறு நாசமாக்கப்படுவதை தடுப்பதையுமே எதிர்பார்கிறார்கள்.
நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் இந்த வீடியோவை மீண்டும் ஒரு முறை பாருங்கள் கருகிய இவ் மொட்டுக்கள் மீண்டும் துளிக்ர்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். இவ்வாறானவர்கள் உங்களிடத்தில் இருந்தால் அவர்கள் வாழ் வழி செய்து கொடுங்கள்.சிறு துளி பேரு வெள்ளம் இவ்வாறுஒவ்வொரு தனி மனிதனும் நினைப்பான்என்றால் அது சமுக நினைப்பாய் மாறிவிடும் அல்லவா.
இந்த வீடியோவைபகிர்வதன் மூலம் யாரோ ஒருவர் திருந்துவார்என்றால் அதுவே அவர்களுக்கு கிடைத்த அங்கிகாரம்
ஏழையின் சிரிப்பில் இன்பத்தை காண்பது என்பது போய் இப்போ ஏழையின் அழுகையில் இன்பம் காண் என்பதே நடந்து கொண்டிருக்கிறது.
ஈழத்தில் தமிழினம் சாவுண்டது பத்தாதென்று இப்போ அப்பாவி ஏழை மீனவர்களும் இவ்வாறு துடித்து தம் உயிர் கொடுப்பது பரிதாபமே.
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலை மாறி தமிழன் என்று சொல்லடா சுட்டு கொல்லடா" என்ற பரிதாப நிலைக்கு தமிழன் உயிருக்கு மதிப்பு போய்விட்டது. அண்மையில் நடந்த மீனவ படு கொலைகளை கண்டித்து உலகில் தமிழர்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்க என் சார்பாக நன் என்ன செய்ய முட்யும் என் பார்த்ததில், வலைப்பூக்களில் பலர் தங்கள் வழிகளை, ஆதங்கங்களை தெரிவித்து இருந்தார்கள். அதில் வைகை சகோ அருமையான ஒரு கடிதத்தை பதிவாக போட்டிருந்தார். அதே போல நாம philosophyprabhakaranஉணர்ச்சி துண்டும் விதத்தில் ஒரு பதிவையும் தோழி ரேவா அருமையான ஒரு கவிதையையும் தந்து பதிவுகளாக தந்திருந்தார்கள். அதில் சகோ வைகையின்வைகை பதிவை இங்கு பதிவாக போடலாம் என்று அதை உங்கள் பார்வைக்கு தந்திருக்குறேன் என் கடமையின் சிறு பகுதியாக...........................
அன்புள்ள முதல்வருக்கு(?!), ஒரு அப்பாவி மீனவனின் கடிதம், நீங்கள் நலமா என்று கேட்க்கப்போவதில்லை, உங்கள் நலம் மற்றும் உங்கள் குடும்ப நலம் ஊரே அறியும்! நாங்கள் நலம் என்றும் சொல்லப்போவதில்லை, எங்கள் நாதியற்ற வாழ்க்கையை நாடே அறியும், உங்களுக்கும் உங்கள் அன்னையையும் தவிர்த்து! நீங்கள் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசில் என்ன மரியாதை கொடுப்பார்களோ அந்த மரியாதையை இந்த கடிதத்திற்கு கொடுக்க வேண்டாம்! அது உங்கள் பதவியை காப்பாற்ற எழுதுவது! இது எங்கள் உயிரை காப்பாற்ற எழுதுகிறோம்! தேர்தல் நேரம் வேறு, உங்களுக்கு கூட்டணி பற்றி பேசவும், தொகுதி பங்கீடு பற்றி பேசவுமே நேரம் சரியாக இருக்கும், எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலைப்பட நேரமிருக்காது! இருந்தாலும்.....எங்களில் ஒருவன் இறந்தால் உங்கள் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும், அதற்க்காகவாது கவலைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்!
ஐநூறு மீனவர்களை சுட்டதர்க்குகூட டெல்லி செல்லாத நீங்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு டெல்லி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன்! நல்லது....அப்படியே உங்கள் அன்னையிடம் எங்களைப்பற்றியும் சொல்லுங்கள்! பிரான்சில் சிங்கின் தலைப்பாகைக்கு வரிந்து கட்டி பேசிய மன்மோகனிடம் சொல்லுங்கள், இங்கு தமிழ் மீனவனின் தலையே போய்க்கொண்டிருக்கிறது என்று! இலங்கைத்தமிழன் சாகும்போதுதான் இந்திய இறையாண்மை தடுத்தது! இப்பொழுது இந்திய மீனவனே செத்துக்கொண்டிருக்கும் பொழுது எந்த இறையாண்மை தடுக்கிறது என்று கேட்டுச்சொல்லவும்,
ஆஸ்திரேலியாவில் ஒரு வட இந்தியன் தாக்கப்பட்டால் கொதித்து எழும் இந்திய பத்திரிக்கைகள் இத்தனை மீனவன் இறந்த பின்னும் மௌனம் காப்பது நாங்கள் இந்தியர் இல்லை என்பதாக அர்த்தமா?! அதுசரி....நாங்கள் தேர்ந்தெடுத்த உங்களுக்கே எங்களைப்பற்றி அக்கறை இல்லை..அவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?! ரெம்ப நாளா உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்...எங்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்தேர்களே...அவர் யார் என்ன பெயர் என்று சொல்லமுடியுமா? இத்தனை நடந்த பிறகும் ஒரு கண்டன அறிக்கை கூட விடாமல் உங்கள் பின்னால் பதுங்கிக்கொள்ளும் அவரை பார்க்கவேண்டும்!
எங்கள் உயிரின் மதிப்பு உங்களுக்கு ஐந்து லட்ச்சத்தோடு முடிந்துவிடுகிறது! என்ன செய்வது உயிரோடு இருந்தால் உங்கள் ஓட்டு கணக்கு அதைவிட கம்மிதான்! இதை மனதில் வைத்தாவது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்! தமிழின தலைவர் என்று சொல்லியே ஒரு பக்கம் தமிழினத்தையே ஒழித்தாகிவிட்டது! அந்த வெறி பிடித்த வேட்டை நாய்களுக்கு இன்னும் ரத்த வெறி அடங்காமல் இப்பொழுது நாடு தாண்டி நாட்டாமை செய்கின்றது! இங்கு உள்ள தமிழர்களையும் அழித்து விட்டால் உங்கள் வாரிசுகளை எங்கு கொண்டு போய் முதலமைச்சர் ஆக்குவது?! உங்களுக்கு கவலைப்படவேண்டிய விசயந்தான்....யோசிங்க ஐயா! கனிமொழியின் மகன் தலைவராகும் காலத்திலும் கூட வோட்டு போட நாங்கள் வேண்டும்! இந்த படித்தவர்களை நம்ப்பாதீர்கள்! நீங்கள் செய்த ஊழலும், அடித்த கொள்ளையும் தெரிந்துவிட்டால் வோட்டை மாற்றிப்போடும் அபாயம் உண்டு! ஆனால் நாங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய் அரிசிக்கும் இலவச டிவிக்கும் எப்போதும் மாறாமல் இருப்போம்!
முடிவாக ஒன்று ஐயா....இது முடியாத தொடர்கதை என்று எங்களுக்கும் தெரியும்! அதானால் அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள், யார் சாவது என்று தெரியாமலே கடலுக்கு செல்வதை விட...வாரம் ஒருவரை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிகிறோம்! அவர்கள் வெறி அடங்கும் வரை சுட்டுக்கொல்லட்டும்! மகாபாரத்தில் வருமே அதுபோல! எங்களுக்கும் ஒரு பீமன் வராமலா போவான்?!! அதுவரை உங்கள் கடிதங்கள் தொடரட்டும்! அதுவரை உங்கள் வசனத்தை நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்! "வாழ்வது நானாக இருக்க, சாவது தமிழனாக இருக்கட்டும்!" இப்படிக்கு, உங்கள் ஓட்டு வங்கியில் ஒரு அப்பாவி மீனவன்
நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் கீழே இருக்கும் இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Design - Add a Gadget - Html Java/Script சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து உங்கள் பிளாக் சைடு பாரில் இந்த படத்தை தெரிய வைத்தால் இந்த செய்தி மேலும் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும். நம் தமிழனுக்காக உங்கள் பிளாக்கில் ஒரு சிறய இடத்தை ஒதுக்கிகொடுக்கவும்
இப்படி இந்த பேனரை உங்கள் தளத்தின் சைடு பாரில் பதிந்தால் உங்கள் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு அறிய உதவும்.
இதுதொடர்பான கருத்தாக்கங்கள் எழுதத்தொடங்கிவிட்டதால், தொடருங்கள்.டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலை தளத்தில் இணைக்க விரும்பினால் [இப்பக்கத்தின் வலதுபுறம் போல] Dashboard -> design ->page template ->add a gadget -> HTML/Java script என்ற கட்ஜெட்டில் கீழுள்ள கோடுகளைப் போட்டு சேமிக்கலாம். அதுபோக மேற்கண்ட விஷயங்களையும சொல்லலாம்.
டிஸ்கி 1: உங்கள் பிளாக்கில் ஒரு பதிவை ஒரு கண்டனமாக தெரிவியுங்கள். டைப் செய்ய கடினமாக இருந்தால் மற்ற நண்பர்கள் போட்டுள்ள பதிவுகளை காப்பி செய்தாவது உங்கள் பிளாக்கில் பதிவிடுங்கள் ஒரு வழியாக தூங்கி கொண்டிருப்பதை போல நடித்து கொண்டிருக்கும் அரசியல் முதலைகளை எழுப்பினால் போதும்.
காலமெல்லாம் உன் முற்றத்து வாசனை ரோஜாவாய் பூக்க ஆசை கொண்ட எண்ணமதை மாற்றான் தோட்டத்து மல்லிகையாய் மணக்க சொல்லி கொன்றதென்ன நியாயம்
உன் நினைவது உரமாய், தண்ணீராய் ,காற்றாய் உட்புகுந்து வேருன்றிய பந்தமத்தை மண்ணோடு புதைத்து விட்டு - வெறும் கொடியாய் வலம் வரச் சொல்லவதென்ன நியாயம்
வசந்தங்களைதானே யாசித்தேன் நோயாய் நுழைந்து மருந்தை தர மறுத்து உதிர்வை தந்து மரண அவஸ்தை தந்து போகிறாய் அன்பே தொலைந்த வாசத்துக்கு செயற்கை மணம் (முகவரி) கொடுத்து
"வெள்ளை முகிலே" - Music Video
-
புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி "வெள்ளை முகிலே"
*"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா.."*
*நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா*
*பாடியவர...