Thursday, March 14, 2013

வருவது நீ எக்காலம் ......................????


 


எத்திசை நோக்கினும்
உன்னுருவம் வந்தெந்தன்
சிந்தைதனில் நிக்குதடா
பாதை வழி நோக்கியபடி


காஞ்சி பட்டுடுத்து
தலை மேவி பூச்சுடி
நெற்றியிலே பொட்டிட்டு
நீயிட்ட நகை பூட்டி
கானமயில் காத்திருக்கு
மாமனவன் வரவை எண்ணி


உயிர் துடிப்பின் ஓசை கேட்டு
தொடுத்த வைத்த  சரம் சூட்ட
வஞ்சி இவள் பார்வைக்கு

வருவது நீ எக்காலம் ......................????