தத்தி தத்தி நடந்தவள்
சின்ன இதழ் முத்தமிட்டவள்
வைத்து வைத்து அழகு பார்த்தவள்
சொந்த காலில் நின்று விட்டாள்
என்று பெருமைப்படுகிறாய்
என் தன்னபிக்கையின் பிறப்பிடம்
உற்சாகத்தின் ஊற்றிடம்
சாதனையின் சாய்விடம்
ஆறுதலின் அமைவிடம்
எல்லாம் நீங்கள் தானே
இன்னும் சிறு பிள்ளையாய்
உன்மடி ஏறி நான் உட்கார
மகிழ்ந்து போகிறாய்
செல்லமாய் கொஞ்சுகிறாய் .........
என் வருங்காலம்
நீ வளர்த்த கனவுகள்
என்னவன் எப்படி வருவானோ?
என் உயிரை நன்றாய் பார்த்து கொள்வானோ ?-உன்
இரவு புலம்பல்கள் என் தாயிடம் .......
குடும்பத்தின் ஆல மரமாய்
அன்போடும் அரவணைப்போடும் எமை காத்து வருகிறாய்
உனை தந்தையாய் நாம் அடைய
எத்தனை தவம் செய்து விட்டோம்
வாழ்த்துகிறேன் உன் மகள்
வாழ்க நீ பல்லாண்டு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா