நீ மழழை.....
தமிழ் தேன் கவிதை.....
ஒரு தாயாக உனைத் தாலாட்ட,
என் தோளில் தாங்குவேன் கண்மணி,
இது தமிழ் தாலாட்டு !
மடியினில் நீ தூங்கு !
நரகத்தைத் தேடித் தேடி நான் போன பாதை -
மிருகத்தைப் போல அன்று நான் வாழ்ந்த வாழ்க்கை-
கால் போன பாதையெங்கும் நடந்தவன் நானே-
தாலாட்டும் தாயை என்றோ இழந்தவன் நானே-
கண்மணி இன்று தான் -
உன்னாலே மனிதன் ஆனேன் !
கருங்கல்லைப் போன்ற நெஞ்சம் கற்பூரம் ஆனதேன்?
எனக்குள்ளே வாழ்ந்திருந்த பேய் ஓடிப் போனதேன்?
நீ இன்றி சொந்தம் இங்கே எனக்கு யார் கண்ணே ?
நீ வாழ வேண்டும் என்றே வாழ்கின்றேன் அன்பே !
கண்மணி கண்மணி ...............
உனக்காகே வாழ்வேன் நானே !
இன்றைய சினிமா உலக நடிகர்கள் ஒவ்வொருவரும் தமக்கு என சில தனித்துவமான வழிகளை கொண்டுள்ளனர்
அன்றைய சிவாஜி -MGR தொடக்கம் ,ரஜனி -கமல் ,விஜய்- அஜித் என் தொடர்ந்து சிம்பு- தனுஷ் என நீண்டு கொண்டு செல்கிறது
அதிலும் அடுத்த சுப்பர் ஸ்டார் யார் என்ற தேடல் கடுமையாக இருக்கிறது யார்ரும் அறிந்ததே . அதே போல தான் அவர்களது பாடல் தேர்விலும் இருந்து வருகிறது
நம் எல்லோருக்கும் பிடித்த நடிகர்கள் இருப்பார்கள் அந்தவகையில் நான் அஜித் ரசிகை .என்னடா இவள் அஜித் பற்றி எழுத போரலோனு யோசிக்காதிங்க இருங்க வாரேன், நேற்று என நண்பன் திலீப் தன்னுடைய தகவல் உலகத்தில் விஜயின் Top 10 பாடல்கள்என ஒரு பதிப்பு போட்டிருந்தான் .
நான் அஜித் ரசிகை என்பதால் கொஞ்சம் கலாச்சன் அவனை . அதனால் அவன்டிஸ்கியில் என்னை தொடர் பதுவு எழுதும் படி ஆப்புவைத்து விட்டான்.
அதனால் நான் விஜயின் பாடல்களில் என் மனத தொட்ட சில பாடல்களை பகிர்ந்துள்ளேன். வாங்கலே பாக்கலாம்
1.
முதலில் எனக்கு மிகவும் பிடித்த நான் அடிக்கடி முனு முனுக்கும் பாடலான "நினைத்தேன் வந்தாய் " படத்தின் :"என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் "என்ற பாடல்.கற்பனையில் ,கனவில வரும் தேவதை பெண் தான் முன் காண்கையில் வரும் எண்ண ஓட்டங்கள் வரிகளாக்கப்பட்டிருக்கிறது
2
என் இரண்டாவது தெரிவு "மின்சாரக் கண்ணா" படத்தின் :"உன் பேர் சொல்ல ஆசைதான் " என்ற பாடல்.
காதலன் அல்லது காதலியின் பெயர் தான் உதடுகளில் உச்சரிக்கப் படுவது ஒரு சுகம் தான் . காதலின் உணர்வுகளை அழகாய் சொல்லும் பாடல்
3
ஒரு காதலியின் கனவுகளை இதமாய் சொல்லும் ஒரு பாடல் தான் என் முன்றாவது தெரிவு . பத்ரி படத்தின் "காதல் சொல்வது உதடுகள் அல்ல "
இந்த பாடல் என் நண்பன் டிலீப்காக ஜானுவின் ராகமாய்
4
அடுத்த பாடல் விஜய் MGR ரேஞ்சுக்கு action செய்ததால் பிடித்த வித்தியாசமான ஒரு பாடல் வசீகர படத்தின் "நெஞ்சம் ஒருமுறை நீ என்றது"
5
மனதில் நின்ற காதலியே மனைவியாக வந்தால் யாருக்குத்தான் விருப்பம் இல்லை. மனதை நெருடிச்செல்லும் பாடல்
மனதில் நின்ற காதலியே மனைவியாக வந்தால் யாருக்குத்தான் விருப்பம் இல்லை. மனதை நெருடிச்செல்லும் பாடல்
"ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பூவே உனக்கா"க படப் பாடல்
6
6
என்னை மெய்மறக்கச் செய்யும் ஒரு பாடல் . காதலன் தான் காதலிக்காய் படும் ஒரு தாலாட்டு.ப்ரியமுட படத்தின் "ஆகாச வாணி நீயே என் ராணி"
7
அடுத்த பாடல் ஒரு காலத்தில் எல்லார் வாயிலும் முனு முனுக்கப்பட்ட ஒரு பாடல் "ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன் "என் குஷி படுத்திய பாடல்
8
விஜயின் படங்களில் வந்த ஒரு வித்தியாசமான மெலடி பாடல் "சக்கரை நிலவே " என்ற யூத் பட பாடல் . இதில் ஒவ்வொரு வரியையும் ரசித்திருக்கிறேன்
9
என் அடுத்த தெரிவு காதலின் உயிர் வலியை உணர்வுகளுக்குள் கொண்டு சென்ற "நீயா பேசியது " என்ற திருமலை பட பாடல்
10
இறுதியாக தெரிவு செய்தது எல்லோரையும் புரட்டிப் போட்ட ஒரு போக்கிரி பாடல் விஜய் அசினோடு சேர்ந்து அசத்திய :டொலூ டொலூ " பாடல்
என்ன என் பாடல் தெரிவுகள் எப்படி இருக்கு??? , என் தெரிவுகள் விஜயின் top 10௦ பாடல் என கூறினாலும் எல்லார் மனத்திலும் இடம் பிடித்த பாடல்களாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை
டிஸ்கி ;1எண்ண dileep இப்போ O.K தானே உங்கள் விருப்பப்படி தொடர் பதிவை தந்துவிட்டேன்
டிஸ்கி : 2 திலீப் உங்களை அடுத்த பதிவில் நம்ம தல அஜித்தின் supper 10 பாடல்களை தருமாறு கேட்டு கொள்கிறேன் (என்ன நாங்களும் ஆப்பு வைப்போமில்ல )
இரு மன பரிமாற்றம்தனில் ஒரு மனம் பறிபோனதற்கு தினம் தினம் வந்து போகும் நினைவின் சாட்சியாய் கண்ணீர்துளிகள்
உன்னை எனக்கு தந்த அந்த நிமிடங்கள், உலகையே நான் வென்று விட்டதை உணர்த்தியஉன் அருகாமை, யாருமே திட்டாத அளவு உன்னை திட்டித் தீர்த்தநேரங்கள், உயிர்பிழிந்தஉன் பிரிவு, அத்தனையும் மூச்சிருக்கும் வரைமறக்காதட.
மறைத்தஉண்மைகளில் மறித்த என் நிஜங்கள் உணரவில்லை இன்னும் நீ புரியவில்லைஎன் பந்தம் மனம் விட்டு பேசிய காலங்கள் அன்று மனதையே விட்டு விட்டு பேசும் தருணங்கள் இன்று ரணமாய் கொள்ளும் வேதனையில் இன்று துடிக்கிறேன்உள்ளம் நொந்து தவிர்க்கிறாய் எனை நீ தவிக்கிறேன்நான் ஏன்என்று ?????
சவுதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கின் தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷானாவின் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே இந்த தண்டனையை தற்காலிகமாக இடை நிறுத்த சவுதி மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் அதிகாரம் சவுதி மன்னருக்குக் கிடையாது என்றும் இறந்த குழந்தையின் பெற்றோர் இணங்கும் பட்சத்திலேயே தண்டனைக்கான இரத்தப்பணம் வழங்கப்பட்டு ரிஷானாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் அந்த ரத்தப்பணம் எனப்படுகின்ற, கொலைக்கு மன்னிப்பு வழங்கப்படுவதற்காக அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைப் பணத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த மரணதண்டனை இடைநிறுத்தம் குறித்த செய்தியைக் கேட்டு ரிஷானாவின் தாய் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தகவல்:BBC tamil
தனிமை தொலைத்தவனே இவள் தனிமையின் காரணமே இன்பத்தின் உச்சமதைதந்து இன்னலை என் வாழ்வாக்கிப்போனவனே பதில் சொல் என்னிடம் எனக்கு நீ யார் ?????
அருகில் இருக்கையில் எண்ணற்ற ஆனந்தம் இன்று இருந்தும் தொலைவாகிப்போனாய் பிரிதலில்காதலின் புரிதலை எனக்கு மட்டும் பரிசாகிப் போனாய் விடைசொல் என் பிரியமே எனக்கு நீ யார் ???
புரியாத புதிராய் என் வாழ்க்கை நொடிக்கொரு தரம் மறக்க முனைந்து மீண்டும் மீண்டும் தோற்று உன்னை சுற்றும் பினிக்ஸ் பறவையாய்... என் வாழ்க்கை தேடல் தீர்ந்து விடும் முன்னே சொல்லி விட்டு போ எனக்கு நீயார் ???
இன்றைய பதிவு ஒரு சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு வருகிறது.
"வெற்றிகரமான எந்த ஒரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்" என
நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா, அது எந்தளவுக்கு உண்மை என்பதை உண்மையில் ஆண்கள் தான் கூற வேண்டும்.
சரி சரி அதை விடுவோம் கதைக்கு வருவோம்.
ஒருநாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபமாவும் அவரது மனைவியும் தங்கள் இரவு உணவு வேளையை வித்தியாசமாய் களிப்பதற்கு வெளியிலே செல்ல நினைத்து புறப்பட்டார்கள். வெளியே சென்ற அவர்கள் தங்கள் உணவிற்காய் ஒரு சாதரணமான விடுதிக்குள் நுழைந்தார்கள்.
அங்கு இருவரும் மனம் விட்டு கதைத்துக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவ்விடுதியின் உரிமையாளர் ஒபாமாவிடம் சென்று " சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் உணவின் பின் உங்கள் மனைவியுடன் கொஞ்சம் நான் தனியாக கதைக்கலாமா என் கேட்டார் ???
"என்னடா இவன் ஒரு நாட்டின் ஜனாதிபதி நான் இருக்க நாட்டின் முதல் பெண்மணியுடன் என்ன கதைக்க போகிறான் என யோசித்துவிட்டு
"சரி உன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது நீ என் மனைவியுடன் கதைக்கலாம் என் அனுமதி அளித்தார்
சிறிது நேரத்தின் பின் வந்து அமர்ந்த தன் மனைவியை பார்த்து ""என்ன இந்த விடுதி உரிமையாளன் உன்னோடு தனியாய் கதைக்க அப்படி ஒரு ஆர்வமாய் இருந்தான் ? " என ஒபாமா கேட்க , "ஓ அதுவா அவன் என் இளைமைக்காலத்திலே பைத்தியமாய் என் பின்னால் சுத்தியவன் என கூறினாள். ஓ அப்படியா அப்படி என்றால் நீ அவனை திருமணம் செய்திருந்தால் இந்த அழகிய விடுதியின் உரிமையாளியாய் இருந்திருப்பாய் என கூறி முடிக்கும் முன் அவள் "இல்லை இல்லை அவனை நான் திருமணம் செய்திருந்தால் இப்போது அவன் இந்நாட்டு ஜனாதிபதியாய் இருந்திருப்பான்" என்றால் புன்னகையுடன் :)
ஹி ஹி என்னங்க சொல்லுறீங்க இப்போ ? அதுதான் எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ண கூடாது :)
"வெள்ளை முகிலே" - Music Video
-
புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி "வெள்ளை முகிலே"
*"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா.."*
*நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா*
*பாடியவர...