Tuesday, June 28, 2011

என் அப்பாவுக்கு,




தத்தி தத்தி நடந்தவள்
சின்ன  இதழ் முத்தமிட்டவள்
வைத்து வைத்து அழகு பார்த்தவள்
சொந்த காலில் நின்று விட்டாள்
என்று பெருமைப்படுகிறாய்


என் தன்னபிக்கையின் பிறப்பிடம்
உற்சாகத்தின் ஊற்றிடம்
சாதனையின் சாய்விடம்
ஆறுதலின் அமைவிடம்
எல்லாம் நீங்கள் தானே


 இன்னும் சிறு பிள்ளையாய்
உன்மடி ஏறி நான் உட்கார
மகிழ்ந்து போகிறாய்
செல்லமாய் கொஞ்சுகிறாய் .........

என் வருங்காலம்
நீ வளர்த்த கனவுகள்
என்னவன் எப்படி வருவானோ?
என் உயிரை நன்றாய் பார்த்து கொள்வானோ ?-உன்
இரவு புலம்பல்கள் என் தாயிடம் .......


குடும்பத்தின் ஆல மரமாய்
அன்போடும் அரவணைப்போடும்
எமை காத்து வருகிறாய்
உனை தந்தையாய் நாம் அடைய
எத்தனை தவம் செய்து விட்டோம்


வாழ்த்துகிறேன் உன் மகள்
வாழ்க நீ பல்லாண்டு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா



15 comments:

கொஞ்சம் லேசா பொறாமை வருது ஹரிணி...!

உங்கள் உணர்வுகளின் அருமையான வெளிபாடு, அப்பாவின் மேல் நீங்க கொண்டிருக்கும் அன்பு இங்கே கவிதையாய்...!

அப்பாவிற்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஆமாம்... மாதம் ஒரு போஸ்ட் மட்டும் என்ற முடிவில் இருக்கீங்களா ?

நல்ல வாழ்த்துக்களுடன் எனது வாழ்த்துக்களையும் இணைத்து கொள்கிறேன் ..

இறுதியில் இணைத்துள்ள பாடல் .. அவ்வளவு அழகு ...

நல் வாழ்த்துக்கள்

அற்புதமான வரிகள்...

..குடும்பத்தின் ஆழ மரமாய்
அன்போடும் அரவணைப்போடும்
எமை காத்து வருகிறாய்
உனை தந்தையாய் நாம் அடைய
எத்தனை தவம் செய்து விட்டோம் ..

உண்மையான வரிகள்...

nice poem akka :)
happy birthday to ur appa :)

மிக்க நன்றி கௌசல்யா
அஹ அப்படி எல்லாம் இல்லை எழுதுகிறேன் :)

//அரசன் said...
நல்ல வாழ்த்துக்களுடன் எனது வாழ்த்துக்களையும் இணைத்து கொள்கிறேன் ..

இறுதியில் இணைத்துள்ள பாடல் .. அவ்வளவு அழகு//

மிக்க நன்றி அரசன் :)

VELU.G said...
நல் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி VELU.G :)

//சங்கவி said...
அற்புதமான வரிகள்...//
மிக்க நன்றி சங்கவி அண்ணா :)

//Niro said...
nice poem akka :)
happy birthday to ur appa :)//

Thanks Niro :)

குடும்பத்தின் ஆழ மரமாய்//

கீ போர்ட் தவறு செய்து விட்டதோ...

உங்களின் தந்தைக்கு என்னுடைய உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக் கவி, ஓர் தந்தையாய்- மகள் மூலம் அவர் பெற்ற பெருமைகளையும், பாசப் பிணைப்பினையும் அருமையாக விளம்பி நிற்கிறது.

நன்றி நிரூபன்
நீங்கள் சுட்டி கட்டிய தவறை திருத்திவிட்டேன்

நன்றி :)

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html

வாழ்த்துகள்.அருமையாக உள்ளது உங்கள் பதிவும்,தளமும்.

Post a Comment