Sunday, August 14, 2011

கருகிய மொட்டுக்கள் துளிர்க்கட்டும்



நாம் பொதுவாக பிஞ்சு குழந்தைகளையும் பெண்களையும் பூக்களாககடவுளாக பார்க்கிறோம் ஒப்பிட்டு பேசுகிறோம்.ஏன்  ?அவர்கள் மென்மையானவர்கள்,ரசிக்கபடுபவர்கள் ,வாசனைமிக்கவர்கள் ,வண்ணம்மிகுந்தவர்கள் என்பதனாலேயே .
அத்துணை மென்மையான பூக்கள் கசக்கி நாசமாகி எறியப்படுகின்றனர் உலகின் ஒவ்வொரு  மூலையிலும் :( அவர்களுக்கு  தெரியாமலே வேலியே பயிரை மேய்கின்றது ,உண்மைதானே ??
சிறுவர் துஷ்பிரயோகம் ,பாலியல் பலாத்காரம் ,வன்முறை என இவர்கள் கருகி நாசமாகின்றனர் .இதனால் HIV/AIDS  என்னும் விஷகிரிமி இவர்களுக்குள்     புகுத்தப்படுகின்றது ..,,,,,,,,,,,
இதுவெல்லாம் உங்களுக்கு புதியவை அல்ல என்பது தெரிந்ததே இருப்பினும் ,இத்தனை தகவல்கள் தெரிந்த நாம் இவ்வாறானவர்களை எவ்வாறு அங்கீகரிக்கின்றோம் ??? சமுகத்தில் அவர்களின் எதிர்காலம் என்ன ???
நான் பகிர்ந்திருக்கும்  இந்த வீடியோவை பாருங்கள் 







சுனிதா கிருஷ்ணன் ,

இந்தியாவில் சிறுவர் துஷ்பிரயோகம்  பாலியல் துன்புறுத்தல் , பாலியல் பலாத்காரம் மற்றும் அதில் பாதிக்கபட்டவர்களுக்க தம் வாழ் நாளை அர்ப்பணித்து சேவை ஆற்றி வருபவர் .
அவர்கள் பாதிக்கபட்டவர்களாக அன்றி சமுகத்தில் அவர்களுக்கு ஒரு அங்கிகாரத்தை கொடுக்க போராடும் ஒரு பெண் 
இந்த வீடியோதான் என்னை எந்த பதிவை எழுத தூண்டியது.
எத்தனை போராட்டங்கள் ,எத்தனை சவால்கள் ?இது உலகமா இல்லை நரகமா என்ற கேள்வி என்னுள் :(
குடும்ப சூழ்நிலை, சந்தர்ப்ப சூழ்நிலை இந்த பிஞ்சு குழந்தைகளையும் ,பெண்களையும் சாகடித்து விட்டதே :"(
கருகி போன மொட்டுக்கள் குப்பையில் தூக்கி   எரிந்து விட்டு சமுகம் ,தனி மனித சமத்துவம் ,மனிதாபிமானம், உரிமைகள்  பற்றி சமுகத்தில் நாம் பேசுகிறோம் 
வெட்கம் :(,
சமுகம் என்பது யார் ,நான் நீங்கள் எம் குடும்பம் என் சேர்ந்து வரும் தனி மனித சேர்வை  தானே .அப்படி இருக்கும் போது இவ்வாறான துஷ்பிரயோகங்கள் எம் மத்தியில் நடக்கும் போது நமக்கு தெரிந்தவர்களாய்  இருந்தால் வாய் முடி சமுகத்தின் பேரில் தப்பித்து கொள்கிறோம்  அல்லது மூடி மறைத்து விடுகிறோம் . இவ்வாறான தாக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க தவறுகிறோம். 
இவர்கள் உங்களிடம் உதவியை எதிர்பார்கவில்லை தங்களும் சமுகத்தில் தாமும் ஒருவராக அங்கிகரிக்கப்படுவதையும், அவ்வாறு   தாக்கப்பட தமக்காக குரல் குடுக்கவும் இன்னொருவர் அவ்வாறு நாசமாக்கப்படுவதை தடுப்பதையுமே   எதிர்பார்கிறார்கள்.
நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் இந்த வீடியோவை மீண்டும் ஒரு முறை பாருங்கள் கருகிய இவ் மொட்டுக்கள் மீண்டும் துளிக்ர்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். இவ்வாறானவர்கள் உங்களிடத்தில் இருந்தால் அவர்கள் வாழ் வழி செய்து கொடுங்கள்.சிறு துளி பேரு வெள்ளம் இவ்வாறு ஒவ்வொரு தனி மனிதனும் நினைப்பான்  என்றால் அது சமுக நினைப்பாய் மாறிவிடும் அல்லவா.
இந்த வீடியோவை  பகிர்வதன் மூலம் யாரோ ஒருவர் திருந்துவார்   என்றால் அதுவே அவர்களுக்கு கிடைத்த அங்கிகாரம்   

               நன்றி 



6 comments:

வெட்க கேடான விஷயம்....

திருந்தினால் சந்தோஷம்

விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்

கருகிய மொட்டுக்கள் துளிர்க்கட்டும்..

நன்றி இராஜராஜேஸ்வரி :)

கருகிய மொட்டுக்கள் துளிர்க்கட்டும்........
வாழ்த்துகள் புது உறவே தங்களின் தளத்திற்கு
இன்றுதான் என் முதல் முதலாக வந்துள்ளேன்.
சிறப்பான ஆக்கங்களுடன் வெற்றிநடைபோடும்
தங்கள் தளம் வளம்பெற வாழ்த்துகின்றேன் .
நன்றி பகிர்வுகளுக்கு.........

நன்றி அம்பாளடியாள் :)

Post a Comment