Thursday, August 5, 2010

மறக்கா கவிதை


நிசப்த இரவினில்
என் மௌனம் கூட
சில நிமிஷங்களே . அதை
உன் நினைவுகளே
கலைத்துவிட



நிழல் நம்பும்
என் தனிமை
உடல் நம்பிடும்
உன் பிரிவை .........ஏனோ
உயிர் மட்டும்
நம்ப மறுக்க



உணர்வுகளுக்கு
தடை விதித்து
அவற்றை எழுதிலிட
காகிதமெடுத்து
எழுத முற்படுமுன்
சொற்கள் மறக்க

இறுதியில் நீ
மறந்த என் பெயரும்
மறக்க முடியாத
உன் பெயரும்
கனவில் மட்டும்
இணைந்தன அன்பே
மறக்கா கவிதையாய்!



0 comments:

Post a Comment