Tuesday, August 3, 2010

ஒற்றை விடுதலை



ஆச்சாரியம் பேசும்
ஆச்சரிய உலகமடா
விதிகளை விரட்டிடும்
விந்தை மானிடமடா
எச்சில் கை
காக்கை விரட்டிடா
எச்சை பேய்களடா

தீட்டு பேசிடும்
தீயவர் சொந்தமடா இது
நாட்டமை சொல்லிடும்
நஞ்சு நரகமடா
எத்தனை பேசினும்
தொடரும் சாபமடா
 பெண்ணாய் பிறந்ததே
தீட்டாமடா

கடவுள் பெண்ணை
படைத்தானாம்
அவனில் சரிப்பாதி
கொடுத்தானாம்
எட்டவில்லை இந்த
மாக்களுக்கு இறைவன்
ஞானம்

பெண்ணவள் தீட்டென்றான்
கோயில் குளம் ஆகதென்றான்
மூன்றுநாள்  தள்ளிவைத்தான்
தொட்டதெல்லாம் தீதென்று
கழுவிவைத்தால்

பெண்ணவள் தீட்டு என்றால்
அர்த்தநாரீஸ்வரனும்
படைத்திட்ட பிரமமும்
காத்திடும் திருமாலும்
அழித்திடும் உருத்திரனும்
தீட்டான் தான் தம் பெண்ணாள்
பாகம்தனை சரிபாதி கொண்டவரை

 சமுதாயத்தை சீர்குலைக்கும்
மூடநம்பிக்கை
சரிபாதி பெண்ணை
அடிமையாய் ஆழும்
ஆணாதிக்கதன்மை
இந்த தீட்டுகளை
தீயிட்டு கொளுத்த வேண்டும்
கட்டவிழ்த்து விடப்பட்ட
காளையார்(காடையர்) நடுவே
கட்டுபாடுடன் காலம் நகர்த்தும்
பெண்மை
ஒற்றை விடுதலையைக் கட்டுடைத்து

0 comments:

Post a Comment