Thursday, August 5, 2010

எங்கே என் காதலன் ????


அந்திநேர ஜன்னலோரப்
பேருந்துப் பயணம்
எதிரிலே காதல் ஜோடி
கண்களாலேயே ஏதோ
பேசிக்கொள்ள,,,,,,,,,,,,,,,

நிலவவள் சந்திப்பில்
சிவந்த வானம்...........
சற்று மௌனம் எனை தழுவ

"எங்கே என்னவன்
என் அன்புக்காதலன்
ஏனோ இன்னும்
சந்திக்கவில்லையே?"

கொஞ்சம் திமிர்
கொஞ்சம் பிடிவாதம்
கொஞ்சம் வாலு
உண்டனே கோபம் கொள்ளும்
இவளை காண மனமில்லையோ ????

கொஞ்சம் கிறுக்கு தனமும்
ஏதோ கவிதை கிறுக்கும் கற்பனையும்
சகிக்க ஒருவன் பிறக்கவில்லையா ?இல்லை
என் லொள்ளு எவனுக்கும் ஏற்றதில்லையா?

துரத்தி துரத்தி
காதலிக்க வேண்டும்
தினமும் என்னை ரசிக்க வேண்டும்
நித்தம் ஒரு முறை விசாரிக்க வேண்டும்
தோழனாய் அவன் தோல் சாய
குழந்தையாய் அவன் மடியில்
நான் உறங்க வேண்டும்

கண்ணம்மா என செல்லமாய்
எனை அழைத்து பாரதியாரின்
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன் எனக் கொண்ட பொழுதிலே – என்றன்"
என காதிலே முனங்க வேண்டும்.

இன்னும் எத்தனயோ
இருக்கிறது ரகசியமாய்
அவன் கேட்க என்
புலம்பல்கள்

இப்படி ஒருவனை கண்டால்
சொல்லுங்கள் என்னை பற்றி
என்னை காதலிப்பதை விட
நூறு மடங்கு காதலிப்பேன்
நான் அவனை

அப்படியொருவனை
இன்றல்லா விட்டாலும்
சீக்கிரம் என்
கண்ணில் காட்டுவது
யார் பொறுப்பு ??????



பி. கு: என்ன லொள்ளு இவளுக்கு ஹி ஹி ஹி

0 comments:

Post a Comment