Monday, August 2, 2010

ஏன் எனக்கு மட்டும் ???????


எது எந்தன் முதன்மை???
பல உயிர்கள் பிணமாகிய போதும்
நான் உயிர்வாழ்வதா?
எது என்னில் விஷேஷதுவம்???
பட்டினி,உணவுக்காக கையேந்தாது
உண்ண உணவும் உடுத்த உடையும்
நான் கொண்டிருப்பதா??
எது எந்தன் தரம் ???
ஒதுங்க உரையூள், அன்பான குடும்பத்துடன்
நான் வாழ்வதா?
எது என்னை வேறுப்படுத்துவது ?
கவனிப்பார் அற்றவர் மத்தியில்
என்னை கவனிப்பார் பலரிருப்பதா?
"ஏன் எனக்கும் மட்டும் "என்ற கேள்விக்கு
விடையாய் அமையும் இவைகளே.

2 comments:

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

நன்றி டிலீப்

Post a Comment