Friday, July 16, 2010

அடுத்த பொறந்தநாள்































எங்கேமா
போய்ட்ட நீ ?

ஏ பேரு லட்சுமி
நெனவிருக்கா
ஒனக்கு ஓ மகள?




எப்படிம்மா
இருப்ப நீ?

ஓ மொகோ
கூட பாத்ததில்லையே


உன்மக
அப்பா சொல்லுவாரு
நீ கருப்பா லட்சணமா
இருப்பனு

அப்படியாம்மா?


நீ சாமிக்கிட
போய் எட்டுவருசமமே
இண்டயோட? ம்
இருக்கும் இண்டைக்கு
எனக்கும் எட்டுவயசம்மா



என்னோட படிக்கிற
புள்ளங்க எல்லாம்
தங்க அம்மாவோட
பொறந்தநாள் கொண்டாடுறாங்க




ஏன் அம்மா
நீ மட்டும்
சாமிக்கிட போய்ட
என்ன விட்டுட்டு ?


என்னம்மா கோவம்
என்மேல ?

எப்பம்மா நா
அங்கவந்து உன்னோட
பொறந்த நாள் கொண்டாடுறது ?


அன்னம்மா பாட்டி
சாமிகிட வந்தப்ப

எங்கம்மாவகேட்டனு
சொல்லு பாட்டினு
சொல்லி அனுப்பினேனே
சொன்னுச்ச உன் கிட்ட?




சரியம்மா அப்பா
வந்துருச்சி அதுக்கு
தேத்தண்ணி போட்டு குடுக்கன
நா போறே ..................
அடுத்த பொறந்தநாள்
ஒன்னோடதா










0 comments:

Post a Comment