Friday, July 23, 2010

பெண்!


தாய்க்கு மகளாய்
தந்தைக்கு புதல்வியாய்
உடன் பிறந்தோர்
உற்ற சகோதரியாய்
கொண்டவனின் மனைவியாய்
பிள்ளைகளின் அம்மாவாய்
அனைவருக்கும் தோழியாய்
அவள் காலம் கழிய
தனிமையில்
பேதை மனம் கேட்கிறது
அரைநொடியாவது
உனக்காய் நீ வாழ்ந்தாயா ?

0 comments:

Post a Comment