Friday, July 23, 2010

வீணை
















நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ சொல்லடி
சிவ ஷக்தி எனை சுடர் மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்.................

தந்தி மீட்ட தெரியா கைகளில்
தந்தி அறுக்கப்பட்டு
நாராசமாய் ஒலிப்பதைவிட
நஷ்டமில்லை வீணைக்கு
நலங்கெட்டுப்
புழுதிப்புனலில் புதைந்திருப்பது

எப்பொழுதாவது வீணையை
வீணைக்காய் நெருங்கியிருக்கிறாயா???

தேடல் எனக்கான நிஜமாய்
கண்களில் காதலுடனும்
உண்மையான உள்ளத்துடனும்
நுனிவிரல் தீண்டினாலும் போதும்
நூறு நூறு ஸ்வரப் பிரிகைகளுள்
மூழ்கடிப்பேன் உன்னை
முழுதாய் சுவர்க்கம் சேர்ப்பேன்

அதுவரை
கிடந்துவிட்டுப் போகட்டும் வீணை
கலைமகளின் கைகளிலும்
கவனிப்பாரற்ற மூலையிலும்
மட்டும்.

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ சொல்லடி
சிவ ஷக்தி எனை சுடர் மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்.................

0 comments:

Post a Comment