Monday, July 19, 2010

நிலவுப்பயணம்








 



நேற்றுவரை வானம்
நிலவவளின்
சொந்தம் என
 மடந்தையிவள்
பூரித்து நிற்க


இன்றுமுதல் வானம்
மேகத்துக்கு
சொந்தமென்றால்
என்செய்வாள் இம் மதி?

எட்டிப் பிடித்த வானமதை?
நொந்துகொள்வதா? இல்லை
புரிந்து கொண்ட பேதை
இவளின் மடமை என்பதா?

துடித்து நிற்கின்றாள்
முழுமதியிவள்
மூன்றாம் பிறையாய்
வானத்தை எண்ணி


தொடர்கிறது
நிலவவள் பயணம்
பகல் நிலவாய்
தொலைந்து போன
கனவுக்குள்
மீண்டும் மீண்டும்
தொலைந்தவளாய்








0 comments:

Post a Comment