Monday, December 13, 2010

மாற்றமே வாழ்க்கையாகும்:!!!!!!!!!1


பாடல்.:சேரன் .

காற்றோடு போனதெல்லாம் கனவோடு மீளக் கண்டேன்

ஆற்றோடு போனதெல்லாம் அலையோடு சேரக் கண்டேன்
வேற்றவர் நாட்டுக்குள்ளே வேறென்ன கிடைக்குமென்று
தீட்டிய பாடலொன்றே தெருவோரம் முழங்கக் கேட்டேன் .


வற்றாத ஊற்றினோரம் ஆடிய மலரைக் கண்டேன்
கிட்டாத காதலுக்காய் கரைகின்ற கோபம் கொண்டேன்
பாட்டோடு பிறந்த நெஞ்சம் பழுதாகிப் போவதுண்டோ
முற்றாத காதலோடு முழுமையை தேடுகின்றேன்.
                                            (காற்றோடு போனதெல்லாம்...)


நேற்றைய நினைவின் கோலம் நிழலாகி மறைந்த போதும்

தோற்றத்தில் மாற்றம் சேர்ந்து துயரங்கள் சூழ்ந்த போதும்

தோற்காது வாழ்க்கை என்பேன் தொடர்ந்து நான் முன்னே செல்வேன்

மாற்றமே வாழ்க்கையாகும் மாறாமல் ஏதும் உண்டோ...

                                               (காற்றோடு போனதெல்லாம்....) 




மாற்றங்களே நிலையாகிப் போன வாழ்வினிலே 
கடந்தவை கடப்பவை எல்லாம் காட்சியாய் மாத்திரம் 
மனம்தனில் பதிந்து போகிறது 
அண்மையில் என் செவிவழி ஒலித்த  ஒரு இசைத்தட்டின் பாடல் .
அந்த பாடலின்  ஒலி வடிவத்தை தர  முடியாவில்லை அதனால் வரிகளை கிர்ந்துள்ளேன்  





27 comments:

நன்றி நன்றி ஜீ

ஃஃஃஃஃமாற்றங்களே நிலையாகிப் போன வாழ்வினிலே
கடந்தவை கடப்பவை எல்லாம் காட்சியாய் மாத்திரம்ஃஃஃஃ

அருமையா வரிகள்...

ஏன் இன்னும் தமிழ் மண வாக்குப்பட்டை இணைக்கவில்லை

http://tamilmanam.net

அட.... சினிமாப்பாடல் ரேஞ்சுக்கு எழுதி விட்டீர்களே... சூப்பர்...

பட பாடலா? இல்ல எதாச்சும் ஆல்பம் பாட்டா? எதுவா இருந்தாலும் நல்லா தான் இருக்கு

//ம.தி.சுதா said...
ஃஃஃஃஃமாற்றங்களே நிலையாகிப் போன வாழ்வினிலே
கடந்தவை கடப்பவை எல்லாம் காட்சியாய் மாத்திரம்ஃஃஃஃ

அருமையா வரிகள்//

நன்றி மதி சுதா நீங்கள் குறிப்பிட்டது என்னுடையா வரிகள் :)

//philosophy prabhakaran said...
அட.... சினிமாப்பாடல் ரேஞ்சுக்கு எழுதி விட்டீர்களே... சூப்பர்..//

நன்றி நண்பா ஆனால் இந்த வரிகளுக்கு சொந்தகாரர் சேரன்
)

//வெறும்பய said...
அருமையா இருக்கு.//
நன்றி நண்பா :)

//Arun Prasath said...
பட பாடலா? இல்ல எதாச்சும் ஆல்பம் பாட்டா? எதுவா இருந்தாலும் நல்லா தான் இருக்கு//
நன்றி நண்பா, இது ஒரு ஆல்பம்

அருமையா இருக்கு ஹரிணி

நன்றி நன்றி டிலீப் :)))))))))

காற்றோடு போனதெல்லாம் கனவோடு மீளக் கண்டேன்
அருமையான வரிகள் நன்றி பகிர்வுக்கு

//tamil cinema news said...
நன்றி //

நன்றி : )

நல்ல பகிர்வு ஹரிணி

நல்ல பதிவு நன்றி :)

அருமை....ரசனை....கருத்தாழம்....

நன்றி நன்றி ஜனகன்

I'm from chennai and i love this blog

good content and thanks for sharing:)

Post a Comment