Tuesday, December 7, 2010

எனக்கு நீ யார் ???







தனிமை தொலைத்தவனே
இவள் தனிமையின்   காரணமே
இன்பத்தின் உச்சமதை  தந்து
இன்னலை என் வாழ்வாக்கிப்  போனவனே
பதில் சொல் என்னிடம்
எனக்கு நீ யார் ?????

அருகில் இருக்கையில் எண்ணற்ற ஆனந்தம் 
இன்று இருந்தும் தொலைவாகிப்போனாய் 
பிரிதலில்   காதலின் புரிதலை
எனக்கு மட்டும் பரிசாகிப் போனாய்
விடை  சொல் என் பிரியமே
எனக்கு நீ யார் ???

புரியாத புதிராய்
என் வாழ்க்கை
நொடிக்கொரு தரம் மறக்க முனைந்து
மீண்டும் மீண்டும் தோற்று  
 உன்னை சுற்றும் பினிக்ஸ் பறவையாய்...
என் வாழ்க்கை தேடல் தீர்ந்து விடும் முன்னே
சொல்லி விட்டு போ
எனக்கு நீ  யார் ???

12 comments:

ஃஃஃஃபுரியாத புதிராய்
என் வாழ்க்கை
நொடிக்கொரு தரம் மறக்க முனைந்து
மீண்டும் மீண்டும் தோற்று ஃஃஃஃ

வரிகள் அருமையாய் வருடிச் செல்கிறது சகோதரி...

எனக்குத் தன் சுடு சோறு ...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

நீ யார் ???//

யாருக்கு தெரியும்...ம்,,நடத்துங்க...இதுவும் நல்லாதான் இருக்கு..

//அருகில் இருக்கையில் எண்ணற்ற ஆனந்தம்
இன்று இருந்தும் தொலைவாகிப்போனாய்
பிரிதலில் காதலின் புரிதலை
எனக்கு மட்டும் பரிசாகிப் போனாய்
விடை சொல் என் பிரியமே
எனக்கு நீ யார் ???//

அருமை ஹரிணி

கவிதை நல்லாயிருக்கு..!!

அப்படியா அப்போ சரி :)
நன்றி சுதா :)

நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்
நன்றி ஹரிஸ்

நன்றி நன்றி டிலீப் :)

நன்றி நன்றி பிரவின்குமார் :)

என் வாழ்க்கை தேடல் தீர்ந்து விடும் முன்னே
சொல்லி விட்டு போ
எனக்கு நீ யார் ???////

சீக்கிரம் சொல்லட்டும் நாங்கள் பார்க்கிறோம்
இந்த வரிகள் நன்றாக இருக்கிறது

நன்றி நன்றி சௌந்தர் :)

ஃஃஃஃஃபிரிதலில் காதலின் புரிதலை
எனக்கு மட்டும் பரிசாகிப் போனாய்
விடை சொல் என் பிரியமே ஃஃஃ

எப்படி இப்படி.....!

நன்றி நன்றி :)
அதெல்லம் தானா வாறது தம்பி :)

Post a Comment