Saturday, January 8, 2011

நீ தனியாக இல்லை ...........





நான்குச்  சுவர்களுக்குள்
சிறைப்படும்  உன் உணர்வுகளின் 
ஏக்கம் 
விழிகளுக்குள்ளே     எட்டிப்பார்த்து 
வெளிவருமுன் வற்றிப்போகும் 
உன் அழுகை 

தாய்மடி  தூக்கம் 
தந்தையின் தோழமை 
உடன்  பிறந்தவர் பாசம் 
ஒரு தொலைபேசி அழைப்பில் 
கேட்க    
கொஞ்சிப்பேசிய காதல்  
நினைவிருந்தும் 
கனவில் மட்டும் தரிசனம்  

வானம்பாடிய நாட்களில் 
வோட்காவுடன்  கழித்த
நண்பர்கள் நினைவடைப்புகள் 
புகையுடன் மட்டும் வெளிவர  

பேச பல இருந்தும் 
பாஷை தெரியா நாட்டின் 
வற்றிப்போகும் 
உன் வார்த்தைகள் 

இத்தனை
விரக்தியின் விளிம்புகள் 
உறவுகளின் பிருவுகள் 
தனிமையின் தவிப்புகள் 
 வாழ்வின் எல்லை வரை தொடர்வதில்லை
கருப்பும் வெள்ளையாய் மாறும் 
சோகங்கள் தீரும் 
வாழ்வில் வெளிச்சம் வரும் 
உன் கடும் உழைப்பால்

 சுமை தாங்கும் 
உன் நெஞ்சின் பாரம் 
கண்களின் கண்ணீர் 
அனைத்தும் மாறும்  
நினைத்துக்கொள் நண்பனே
நீ தனியாக இல்லை  



25 comments:

நண்பனுக்காய் நல்லதொரு கவிதை...

நன்றி நண்பா :)

ரொம்ப நல்லாயிருக்குங்க

வாழ்த்துக்கள்

//சுமை தாங்கும்
உன் நெஞ்சின் பாரம்
கண்களின் கண்ணீர்
அனைத்தும் மாறும்
நினைத்துக்கொள் நண்பனே
நீ தனியாக இல்லை
//

சூப்பர் என்னாதானே சொல்றிங்க

அஹ ஆமா ஆமா :p

நன்றி டிலீப்

நீ தனியாக இல்லை //
சரிதான்.

நன்றி இனியவன் உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் :)

// சுமை தாங்கும்
உன் நெஞ்சின் பாரம்
கண்களின் கண்ணீர்
அனைத்தும் மாறும்
நினைத்துக்கொள் நண்பனே
நீ தனியாக இல்லை///

ஹ்ம்ம்... சரியான வரிகள்... நம்மைப் போல் பலரும் இது போலன்னு... சொல்லாமல் சொல்வது.. நல்லா இருக்குங்க.. :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
// சுமை தாங்கும்
உன் நெஞ்சின் பாரம்
கண்களின் கண்ணீர்
அனைத்தும் மாறும்
நினைத்துக்கொள் நண்பனே
நீ தனியாக இல்லை///

ஹ்ம்ம்... சரியான வரிகள்... நம்மைப் போல் பலரும் இது போலன்னு... சொல்லாமல் சொல்வது.. நல்லா இருக்குங்க.. :-)

ஆமா ஆமா
நன்றி Ananthi (அன்புடன் ஆனந்தி) உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் :

மைந்தன் சிவா said...
touching....!nice!!
Thanks மைந்தன் சிவா

ஃஃஃஃதாய்மடி தூக்கம்
தந்தையின் தோழமை
உடன் பிறந்தவர் பாசம்
ஒரு தொலைபேசி அழைப்பில்
கேட்க
கொஞ்சிப்பேசிய காதல்
நினைவிருந்தும்
கனவில் மட்டும் தரிசனம் ஃஃஃஃ

சூப்பர்................

நன்றி ஜனகன் :)

அருமை..

இந்த கவிதையே அவருக்கு துணையாக இருக்கும் தோழி :)

நன்றி நன்றி ஜெ.ஜெ

//சுமை தாங்கும்
உன் நெஞ்சின் பாரம்
கண்களின் கண்ணீர்
அனைத்தும் மாறும்
நினைத்துக்கொள் நண்பனே
நீ தனியாக இல்லை
//

வரிகள் அருமை

நன்றி தமிழ்த்தோட்டம்

நன்றி ராமலக்ஷ்மி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வழைமையான உங்கள் கவிதை மழை அருமை .

நன்றி மகாதேவன்-V.K

**நினைத்துக்கொள் நண்பனே
நீ தனியாக இல்லை***

அருமையான வரிகள் தோழி

நன்றி நன்றி தினேஷ்குமார்

Post a Comment