Thursday, November 11, 2010

நான் நானாக நீ நீயாக.............................



நானும் நீயும் சந்தித்தது 
நிலவில் என்பது 
கனவில் மட்டும் நான் கண்ட 
வாழ்க்கை 


நான் நானாகவும் 
நீ நீயாகவும் சந்தித்து 
உன்னில் என்னை தொலைத்து  மீண்டது 
நிஜத்தில் நான் கண்ட வாழ்க்கை
இதற்க்கு 
நான் நானாகவும் நீ நீயாகவுமே 
இருந்திருக்கலாம் 

தன் வழிச் சென்றவள் 
வழி தொலைத்து
உன் வழி வந்ததும் ஏனோ ???
வெறும்  காகிதமாய் இருந்தவள் 
உன் பெயரின் கவிதையானதும்  ஏனோ ???
இடையில் தன் முகவரி தொலைத்துச் செல்வதற்கு தானோ 
 இதற்க்கு 
நான் நானாகவும் நீ நீயாகவுமே 
இருந்திருக்கலாம் 

உனக்காய் சிரித்து 
உனக்காய்  சிந்தித்து 
உனக்காய் பிரார்த்தித்து 
உன்னால் அழுது 
 உனக்காய் வாழ்ந்த ஒவ்வொரு  நிமிடமும் 
நினைவுகளாய் மட்டுமே இன்னும்
 என்னை ரணப்படுத்துகிறது 

இதற்க்கு 
நான் நானாகவும் நீ நீயாகவுமே 
இருந்திருக்கலாம் 


5 comments:

உனக்காய் சிரித்து
உனக்காய் சிந்தித்து
உனக்காய் பிரார்த்தித்து
உன்னால் அழுது
உனக்காய் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும்
நினைவுகளாய் மட்டுமே இன்னும்
என்னை ரணப்படுத்துகிறது

சிறந்த கவிதைகள் ஹரிணி வாழத்துக்கள்

நன்றி என்ற சொல்லால் வேறுபடுத்த விரும்பவில்லை

உங்கள் கருத்துகளே என்னை ஊக்கப்படுத்தும் நண்பா

;;;தன் வழிச் சென்றவள்
வழி தொலைத்து
உன் வழி வந்ததும் ஏனோ ???
வெறும் காகிதமாய் இருந்தவள்
உன் பெயரின் கவிதையானதும் ஏனோ ???
இடையில் தன் முகவரி தொலைத்துச் செல்வதற்கு தானோ
இதற்க்கு
நான் நானாகவும் நீ நீயாகவுமே
இருந்திருக்கலாம்;;;

அருமையான கவிதை...சிந்திக்க வைக்கும் வரிகள்.......great

@ Orin
Thank you ma :)

@ ஜனகன்
நன்றி

Post a Comment