Monday, November 8, 2010

நினைவிருக்கிறதாடா உனக்கு ???




எதற்காய் சந்தித்தித்தோம் 
என்ன செய்தோம் 
எதை கொடுத்தோம் 
எதை எடுத்தோம் 
என்ன பேசினோம் 
நினைவிருக்கிறதாடா   உனக்கு ????

உன்னை எனக்கு அறிமுகப்படுத்திய 
Facebook
பேசிப்பேசி தீராத உரையாடல்கள் 
நம்மை   சேர்த்த இரவுகள் 
நிஜம் காணா நம் விழிகள் 
எதை ஒதுக்க எதை சேர்க்க ......
நினைவிருக்கிறதாடா   உனக்கு ???

நிஜம் தேடல் மாற்றம் 
ஏன் என் வாழ்க்கை மந்திரமானது 
நிஜத்தில் தொலைத்த  என் உயிரை 
நிழலில் தேடிய குருடியாய்
இவள் ஆனதும் 
தேடித்தேடி கிடைக்கப் பொருளாய் 
நீ போனதும் 
நினைவிருக்கிறதாடா   உனக்கு ??

தமிழ் இருக்கும் காலம் வரை 
மறக்கா உன் பெயர் .
பாஷை ஒழியும் வரை 
ஒலிக்கும்  உன் குரல் 
நினைவுள்ளவரை இவள் 
நெஞ்சின் ஓவியமாய் 
பதிந்திருக்கும் உன் உருவம் 
எதை எதை சொல்ல நான் 
நினைவிருக்கிறதாடா   உனக்கு ?

எப்படி நினைவிருக்கும்
கண்ணீராய், கானல் நீராய்
கருவறையில் 
மறைந்து மரணித்து போனது 
என் காதல் அல்லவா

2 comments:

Post a Comment