தினம் தினம்
இருள் சூழ்ந்த பொழுதுகளின்
மாமிச கருடன்களுடன்
வேட்டையாடி தோற்கும்
ஒரு ஜீவனாய்
தினம் தினம்
இருவுகளில் சேற்றில்
மலர்ந்த செந்தமரையாய்
விடிந்தவுடன் குளியலில்
வெந்தாமரையாய்
உடல் பூசிக்கொண்ட
வாசனை திரவியங்களிலும்
மல்லிகைப் பூக்களின் வாசனையிலும்
மறைந்து போகும் அவள் ரத்த வாடை
அவள் கருப்பைக்குள்
விதைகள் நடத்தும்
போராட்டமதை சமாதானபடுத்த
தனக்குத் தானே
எதிர்ப்பூசி ஏற்றிக்கொள்ளும்
தாதியவள்
காம உணர்வுகளின்
சிற்றின்ப ஆசை உச்சத்தில்
தன சுயத்துக்கு விலங்கிட்டு
உணர்வுகளை புதைக்க
தனக்குத் தானே புதைகுழி
வெட்டும் வெட்டியால்
காரிருள் சூழினும்
மாற்றான் வெறி தீர்க்க
தன்னை தானே உருக்கி
வெளிச்சம் தரும்
மெழுகுவர்த்தி
விடிய விடிய
வித்தைகள் காணும்
திருவிழா....... அதில்
பாவங்கள் செய்து
காலையில் குளியலுடன்
புனிதமடையும் இவள்
வேசியாலா ??? அல்லது
சமூக சேவகியா ??????
17 comments:
கவிதை நன்றாக இருக்கிறது. நிறைய விஷயங்களை தைரியமாக கூறியிருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி அருண்
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் :).
நன்றி நன்றி, மகாதேவன்.
இந்த கேள்வி எனக்குள்ளும் பல நாட்களாக இருக்கிறது..நல்லா எழுதுறீங்க..தொடர்ந்து எழுதுங்க...
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அப்படியா??
நன்றி ஹரிஸ் :)
நன்றி ம.தி.சுதா.
அப்படியா??
நன்றி டிலீப் :)
இன்றே உங்கள் தளத்திற்கு முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
நன்றி Prabhakaran.
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் :)
கவிதை மிக நன்றாக உள்ளது. பலவிடயங்களையும்
தொட்டுச்செல்லும் விதம் சிறப்பு. வாழ்த்துக்கள்.
kavithai arumai.
நன்றி Jana.
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் :
நன்றி asiya omar.
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும்
அருமையா சொல்லியிருக்கிறீர்கள்...
நன்றி வெறும்பய :)
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் :)
Post a Comment